நடிகர் சந்தானம் படத்தின் போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் கௌதம் மேனன்.!

சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி தற்பொழுது வெள்ளித்திரையில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்து உள்ளவர்கள் பலர் உள்ளார்கள் அதில் ஒருவர் தான் நடிகர் சந்தானம்.இவர் ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று பிறகு இவருடைய நடிப்பு திறமையினால் பல முன்னணி நடிகர்களின் காமெடி ரோலில் நடித்து வந்தார்.

ஒரு கட்டத்திற்கு பிறகு நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்ற முயற்சியில் ஈடுபட்டு வரும் இவர் தற்பொழுது தொடர்ந்து ஹீரோ கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சாண்டா 15 என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் சந்தானம்.

இந்த படத்திற்கு சாண்ட் 15 என தற்காலிகமாக பெயர் வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த திரைப்படம் சந்தானத்தின் 15ஆவது படமாக தரையாராகி வருகிறது அந்த வகையில் தன்யா போப், ராகினி திரிவேதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.மேலும் இவர்களைத் தொடர்ந்து ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் நவீன்ராஜ் அவர்கள் தயாரித்து வருகிறார்கள் இத்திரைப்படத்திற்கு அர்ஜுன் ஜனையா இசையமைக்கிறார்.

தற்பொழுது இந்த திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளார்கள்.அதாவது சந்தானத்தின் 15 வது பட்டத்திற்கு ‘கிக்’ என பட குழு பெயர் வைத்துள்ளார்கள். அந்த வகையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் கௌதமேனன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இந்த திரைப்படம் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

இவ்வாறு சந்தானம் தொடர்ந்து காமெடி கதாபாத்திரத்தில் அசத்தி வந்த இவர் திடீரென்று ஹீரோவாக அறிமுகமாகி திரைப்படங்களில் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் ரசிகர்கள் ஹீரோவாக இருப்பதைவிட காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பது தான் பிடித்து வருவதாகவும் கூறி வருகிறார்கள்.

Leave a Comment