பிச்சைக்காரனால் மட்டும் சந்தோஷபடும் சிடுமூஞ்சி பாலா..! இணையத்தில் லீக்கான சிதம்பர ரகசியம்..!

director bala latest news: தமிழ் சினிமாவில் கரடுமுரடான இயக்குனர் என்றால் அது இயக்குனர் பாலா தான் ஏனெனில் திரைப்படம் இயக்கும் பொழுது நடிகருக்கு நடிக்க வரவில்லை என்றால் அவரை அடித்து நடிக்க வைப்பார் இதனாலேயே அவரை சிடுமூஞ்சி கோபக்காரர் என பல்வேறு பெயர்களை வைத்து கூப்பிடுவது வழக்கம்

இவ்வாறு அவர் படப்பிடிப்பில் நடந்து கொள்வதை பார்த்து பல்வேறு பிரபலங்களும் இவர் மீது கோபம் கொள்வது வழக்கம் தான் ஆனால் அவருடைய திரைப் படத்தில் நடித்தாலே போதும் கண்டிப்பாக வெற்றி நிச்சயம் அந்த வகையில் இவருடைய இயக்கத்தில் நடித்து பிரபலமான நடிகர்கள் விக்ரம் சூர்யாவை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

இவ்வாறு இவர்கள் இரண்டுபேருமே பாலா திரைப்படத்தில் நடித்ததன் பிறகுதான் இவர்கள் திரை உலகில் பிரபலமானதே அதுமட்டுமில்லாமல் இவர்களுக்கு  ரசிகர் கூட்டம் உருவாவதற்கும் பாலா தான் காரணம் ஒருவேளை இவர்கள் பாலா திரைப்படத்தில் நடிக்காவிட்டால் இவர்கள் இன்று தமிழ் சினிமாவில் இருப்பார்களா இல்லையா என்பது கேள்விக்குறிதான்.

ஏனெனில் அந்தளவிற்கு பாலா தன்னுடைய கதைக்கு ஏற்றவாறு நடிகர்கள் மற்றும் நடிகைகளை  தேர்வு செய்து அவர்களை அவற்றிற்கு ஏற்றார் போல மாற்றி விடுவார் இதன் காரணமாகவே பாலா திரைப்படம் வெளி வந்தாலே போதும் தியேட்டரில் கூட்டம் அலை மோதும்.

இந்நிலையில் பாலா வருடத்திற்கு ஒரு முறை மற்றும் மிக சந்தோஷமாக இருப்பாராம் அதற்கு காரணம் தன்னுடைய நீண்டகால நண்பர்  பிச்சைக்காரர்கள் தான் ஏனெனில் இயக்குனர் பாலா வருடத்திற்கு ஒருமுறையாவது இராமேஸ்வரம் செல்வது வழக்கம்.

அந்த வகையில் பாலா உதவி இயக்குனராக பணிபுரிந்த போது ஒரு பிச்சைக்காரர் இவருக்கு நண்பராக இருந்து உள்ளார். இவ்வாறு அவரை பார்ப்பதற்காகவே வருடத்திற்கு ஒருமுறை ராமேஸ்வரம் சென்று வருவாராம். இவ்வாறு அவரிடம் மனம் விட்டு பேசுவது மட்டுமல்லாமல் சந்தோஷமாக மனம் விட்டு சரிப்பார் என சமூக வலைத்தளத்தில் அவருடைய நண்பர்கள் தெரிவித்துள்ளார்கள் இதனால் இந்த செய்தியானது மிக வைரலாகி வருகிறது.

bala-director
bala-director

Leave a Comment