நான் தற்பொழுது அடைந்திருக்கும் நிலைக்கு முக்கிய காரணம் ‘தளபதி’ விஜய் தான்! இயக்குனர் அட்லீ..

Atlee Kumar: இயக்குனர் அட்லீகுமார் தான் அடைந்திருக்கும் நிலைக்கு விஜய் தான் காரணம் என கூறியுள்ளார். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அட்லீ ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக சினிமாவிற்கு அறிமுகமானார்.

இந்த படத்தில் நயன்தாரா, நஸ்ரியா, ஜெய், ஆர்யா, சந்தானம் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர் .இவ்வாறு அட்லீயின் முதல் திரைப்படமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் மூலம் பிரபலமான அட்லீ விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற மூன்று ஹிட் திரைப்படங்களையும் தந்தார்.

இந்த படங்கள் மூன்றுமே எதிர்பாராத அளவிற்கு ஹிட் அடித்தது. இந்த படங்களை தொடர்ந்து சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். ஜவான் படம் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

atlee kumar
atlee kumar

இவ்வாறு தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வரும் அட்லீ இந்தியாவில் பணக்கார இயக்குனர்களின் லிஸ்டில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார். மேலும் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளும் கிடைத்து வரும் நிலையில் தன்னுடைய இந்த நிலமைக்கு விஜய் தான் காரணம் எனக் கூறியுள்ளார்.

அதாவது சமூக வலைதள பக்கத்தில் தான் அடைந்திருக்கும் நிலைக்கு முக்கிய காரணம் தளபதி விஜய் தான். தன் மீது முழு நம்பிக்கை வைத்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கொடுத்தார் நானும் அவருக்கு ஹிட் கொடுத்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு ஜவான் படத்தின் மூலம் நம்பர் ஒன் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார் அட்லீ.