8 வருடங்களுக்குப் பிறகு இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கும் எஸ்.ஜே சூர்யா.! எப்பொழுது ரிலீஸ் தெரியுமா.?

8 ஆண்டுகள் கழித்து எஸ்.ஜே சூர்யா படம் இயக்க இருக்கும் நிலையில் அது குறித்து அவரே பேட்டியில் கூறி இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது எஸ்.ஜே சூர்யா நீண்ட காலங்களாக ஹீரோவாக நடித்து வரும் நிலையில் எந்த படத்தினையும் இயக்காமல் இருந்து வருகிறார். எனவே இவர் எப்பொழுது படத்தினை இயக்குவார் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்த்து வந்தார்கள் அப்படி தற்பொழுதும் அவர் இயக்க இருக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

நடிகராக வேண்டும் என்ற ஆசையோடு சினிமாவிற்கு அறிமுகமான எஸ்.ஜே சூர்யா அஜித்தின் நடிப்பில் வெளியான வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இவருடைய முதல் திரைப்படமே மிகப்பெரிய வெற்றினை பெற்று தந்தது. எனவே இதனைத் தொடர்ந்து விஜயை வைத்து குஷி திரைப்படத்தின் இயக்கி இருந்தார் இவ்வாறு இந்த படமும் ஹிட் கொடுத்தது தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை தந்து வந்த எஸ்.ஜே சூர்யா இசை படத்திற்கு பிறகு நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.

அந்த வகையில் இயக்குனராகவும் கொடூர வில்லனாகவும் தற்பொழுது வரையிலும் நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் எஸ்.ஜே சூர்யாவிடம் பேசும் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் ரசிகர்கள் மீண்டும் படத்தினை இயக்கங்கள் என கோரிக்கை வைத்து வருகிறார்கள். அப்படி தான் மீண்டும் இயக்குனராக முடிவெடுத்து இருப்பதாக எஸ்.ஜே சூர்யா கூடியுள்ளார் அந்த வகையில் கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்குப் பிறகு இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் கூறியதாவது, நான் கில்லர் என்கின்ற படத்தை இயக்க இருக்கிறேன் அந்த படத்தின் பிரீ ப்ரோடுக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது கில்லரில் நான்தான் ஹீரோவாக நடிக்கப் போகிறேன் தற்பொழுது நான் நடிக்க ஒப்பந்தம் கொண்ட படத்தில் கவனம் செலுத்தி வருகிறேன் அடுத்த ஆண்டு கில்லர் படவேலை துவங்கும் என்றார்.

எஸ்.ஜே சூர்யா தான் இயக்கிய நியூ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான நிலையில் அதன் பிறகு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ராதா மோகன இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து பொம்மை திரைப்படத்தில் நடித்திருந்தார்கள் இன்று இந்த படம் தியேட்டர்களில் ரிலீசானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment