விஜய்க்கு அள்ளி கொடுத்த தில் ராஜூ.. அதை நினைச்சு புலம்பி தவிக்கும் தமிழ் தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வருபவர் தளபதி விஜய். இவர் அண்மைகாலமாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் அந்த வெற்றியை தக்கவைத்துக் கொள்ள அடுத்தடுத்த சிறந்த இயக்குனர்களும் கைகோர்த்து நல்ல படங்களை கொடுக்க முயற்சி செய்து வருகிறார்.

அந்த வகையில் தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விஜய் சூப்பராக நடித்து முடித்துள்ளார் இந்த படத்தில் விஜயுடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, யோகி பாபு , சரத்குமார்,  பிரகாஷ்ராஜ் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப சென்டிமென்ட்  கதையாக உருவாகி உள்ளதால்..

ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களையும் அழகாக கவர்ந்து இழுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்தப் படத்தை எதிர்த்து அஜித்தின் துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு படமும் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆகுவதால் ரசிகர்கள் இந்த இரண்டு படங்களையும் திருவிழா போல கொண்டாட முடிவெடுத்துள்ளனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜூ மீது செம்ம கடுப்பில் இருக்கின்றனர் தமிழ் தயாரிப்பாளர்கள் காரணம் தளபதி விஜய் பீஸ்ட் படத்திற்காக 100 கோடி சம்பளம் வாங்கி நடித்தார். ஆனால் வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகும் என்பதால் விஜய் திடீரென 125 கோடி சம்பளம் கேட்டார்.

அதற்கும் தில் ராஜு ஒப்புக்கொண்டதால் இந்த படத்தில் விஜய் நடித்த கூறப்படுகிறது. வழக்கமாக டாப் நடிகர்கள் 5 கோடி தான் சம்பளத்தை உயர்த்துவார்கள். ஆனால் விஜய் 25 கோடி உயர்த்தி 125 கோடி சம்பளம் வாங்குகிறார் இனி அதிலிருந்து அவர் குறைக்க மாட்டார் என கூறப்படுகிறது இதனால் தமிழ் தயாரிப்பாளர்கள் தில் ராஜூ மீது செம்ம கோபத்தில் இருக்கின்றனர்

Leave a Comment