நினைத்தேன் வந்தாய் திரைப்படத்தில் வரும் வெண்ணிலவே பாடலில் ரம்பாவுக்கு பதில் இந்த நடிகைதான் நடித்தாரா.! பல வருடங்கள் கழித்து வெளியான உண்மை தகவல்.!

இளையதளபதி விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் என்ற திரைப்படம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த திரைப்படத்திற்கு முன்பு தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் வெளியாகி பல கோடி வரை வசூல் செய்ததை நாம் பார்த்திருக்கலாம்.

மேலும் இளையதளபதி விஜயின் திரைப்படங்களில் மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்று தான் நினைத்தேன் வந்தாய் கடந்த 1998ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி தமிழில் வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று பல நாட்கள் ஓடி விட்டது அதிலும் குறிப்பாக நடிகை தேவயானி மற்றும் நடிகை ரம்பா என இரண்டு கதாநாயகிகள் நடித்த படம் வேற லெவலில் தான் இருந்தது.

இந்த திரைப்படத்தை இயக்கிய செல்வபாரதி இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வைக்க முதலில் நவரச நாயகன் கார்த்திக் அவர்களை தான் அழைத்தாராம் ஆனால் சம்பள பிரச்சனையால் அவர் நடிக்க முடியாமல் போய்விட்டது அதன் பிறகுதான் தளபதி விஜய் நடித்துள்ளாராம்.

மேலும் இந்த திரைப்படத்தில் வரும் அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விட்டது அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் வரும் வெண்ணிலவே என்ற பாடல் மக்களின் பேராதரவைப் பெற்று இந்தப் பாடல் சூப்பர் ஹிட் ஆனது மட்டுமல்லாமல் இந்த பாடலில் முதலில் நடிக்க வைக்க பல நடிகைகளை வரச்சொல்லி இயக்குனர் செல்வபாரதி அவர்களை நடிக்க சொன்னாராம்.

ஒருநாள் விஜய் டென்ஷன் ஆகி எப்பொழுதுதான் இந்த காட்சியை நாம் முடிக்கப் போகிறோம் என கேட்டுள்ளார்.ஆனால் இந்தப் பாடலில் ரம்பாவை தான் நடிக்க வேண்டுமாம் ரம்பா ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிசியாக நடித்து வந்ததால் ரம்பாவின் முகத்தை காட்டாமல் வேறு ஒரு நடிகையை ரம்பா போல் நடிக்க சொன்னாராம்.

simran
simran

இந்த படத்தில் வரும் வேறு ஒரு நடிகை வேறுயாரும் இல்லையாம் நடிகை சிம்ரன் தான் இந்த பாடலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது மேலும் இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் இத்தன நாளா இது தெரியாம போச்சே என்று கமென்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment