18 வயது வேலைக்கார பெண் போர்வையை போத்திக்கொண்டு ராதிகா வீட்டில் செய்ததை பார்த்தீர்களா.! அப்போ வீட்டை விட்டு வெளியே அனுப்பியதற்கு காரணம் இதுதானா.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் நடிகை ராதிகா இவர் நல்ல நடிகையாக பல திரைப்படங்களில் நடித்து தன்னை நிரூபித்து காட்டியவர் கிழக்கு சீமையிலே படத்தில் விஜயகுமாரின் தங்கச்சியாக வாழ்ந்து இருந்தார் இவர் சினிமாவை தாண்டி சீரியலிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் பல முன்னணி தொடர்களான சித்தி, வாணி ராணி, அண்ணாமலை என பல சீரியவர்களின் நடித்தவர். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய கார்டன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்களையும் சீரியல்களையும் தயாரித்துள்ளார். மேலும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமாரின் மனைவி நடிகவேள் எம் ஆர் ராதா மகள், ராதாரவியின் தங்கை, நிரோஷாவின் அக்கா என பல அடையாளங்கள் சினிமாவுக்குள் இருக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் தன்னுடைய வீட்டில் நடந்த அசம்பாவிதம் பற்றி வெளிப்படையாக பேசி உள்ளார். அதாவது தன்னுடைய வீட்டில் 18 வயது மதிக்கத்தக்க ஒரு சின்ன பொண்ணை வேலைக்கு சேர்த்து வைத்திருந்தேன் ஒரு நாள் அந்த பெண் செய்து கொண்டிருந்த வேலையை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன் அதனால் இனிமேல் இந்த சின்ன பொண்ணுங்களுக்கு வேலையை கொடுக்கக் கூடாது என முடிவெடுத்தேன்.

மேலும் அவர் கூறியதாவது ஒரு நாள் போர்வையை போர்த்திக் கொண்டு அந்தச் சின்ன பெண் செல்போனில் யாருக்கோ சத்தம் இல்லாமல் பேசிக் கொண்டிருந்தால் ஒருவேளை நாளை ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டால் நம்முடைய பெயர் கெட்டுவிடும் என்பதால் அந்த சின்ன பெண்ணை வீட்டில் வேலைக்கு வருவதை நிறுத்திவிட்டேன் எனக் கூறியுள்ளார் நடிகை ராதிகா.

இப்படி போர்வைக்குள் வேலைக்கார பெண் யாருடனோ பேசிக் கொண்டிருந்ததால் அந்த பெண்ணை வேலையில் இருந்து நீக்கி உள்ளார். இது ஒரு குடும்ப தலைவியாக நல்ல பாதுகாப்பான முடிவை எடுத்துள்ளார் என பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.