நடிகர் பிரபுவுக்காக என் இதயம் எப்பொழுதுமே துடித்துக் கொண்டிருக்கும்.! நடிகை குஷ்பூ எப்படி எல்லாம் ட்விட் போட்டுள்ளார் பாத்தீங்களா..

ஒரு காலத்தில் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடி போட்டு நடித்து வந்த நடிகைகளில் ஒருவர்தான் குஷ்பூ இவர் 90களில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வந்தார் என்றும் கூறலாம். அந்த அளவிற்கு இவர் நடித்த அனைத்து திரைப்படங்களுமே சூப்பர் ஹிட் ஆகியிருக்கும் மேலும் இவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரது நடிப்பை மறக்கவே முடியாது அந்த அளவிற்கு அற்புதமாக நடிக்கும் நடிகை குஷ்பூ.

தமிழைத் தவிர்த்து இவர் மலையாளம்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம் போன்ற பலமொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் தற்பொழுது சினிமாவில் அதிகமாக ஆர்வம் காட்டுவதில்லை என்றாலும் அரசியலில் ஈடுபட்டு விட்டார் இருப்பினும் இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார் அவ்வாறு இவர் நடித்த பல சீரியல்கள் மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும்.

சமூக வலைதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் குஷ்பூ தனது உடல்நிலை குறித்து சமீபத்தில் ரசிகர்களுக்கு ஒரு தகவலை பகிர்ந்தார்.இதனைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் குஷ்பூ தற்பொழுது ஒரு பதிவை பதிவு செய்துள்ளார்.

அதாவது பிரபு மற்றும் இவரும் சேர்ந்து நடித்த திரைப்படம் தான் சின்னத்தம்பி இந்தத் திரைப்படம் வெளியாகிய பொழுது இவர்கள் இருவருமே ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வந்தார்கள் இந்நிலையில்  இந்த திரைப்படம் வந்து 32 வருடங்கள் ஆகி உள்ளதால் இதை என்னால் நம்ப முடியவில்லை என குஷ்பூ பதிவு செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் என்னுடைய இதயம் எப்பொழுதும் பிரபு சாருக்கும்,பி.வாசு மற்றும் இந்தத் திரைப்படத்தில் இசையமைத்த இளையராஜா சாருக்கும் மற்றும் கே.பாலு சாருக்கும் என்னுடைய நன்றிகள் என்று குஷ்பூ பதிவு செய்துள்ளார். மேலும் இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் நீங்கள் நடித்த அந்த திரைப்படத்தை மறக்க முடியுமா எப்படி அந்த திரைப்படத்தில் நடித்திருப்பீங்க அந்த திரைப்படத்தை நாங்கள் மறந்து விடுவோமா என்றும் கூறி வருகிறார்கள்.

kushboo
kushboo

Leave a Comment