ரஜினி இருக்கும் புகைப்படங்களில் இதை கவனிச்சீங்களா.? தீயாய்பரவும் செய்தி..

தமிழ் சினிமா உலகில் எத்தனையோ நடிகர்கள் இருக்கின்றனர் ஆனால் நம்பர் இடத்தை பிடித்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் இவர் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இன்றுவரை பட்டையை கிளப்பி வருகின்றன.

இவர் அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 169 திரைப்படமான ஜெயிலர் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த திரைப்படமாக உருவாகிய வருகிறது  இந்த படத்தில் ரஜினி வயதான தோற்றத்தில் நடித்து வருகிறார்.

அவருடன் கைகோர்த்து கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் பல முக்கிய இடங்களில் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினி ஆன்மீகத்தில் அதிகமாக ஆர்வம் காட்டிக்க கூடியவர் இமயமலைக்கு எல்லாம் போய் வருவார் யோகா செய்வார் என பலமுறை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் அதை படங்களில் கூட அவர் காட்டி இருக்கிறார். மேலும் ரஜினி யாருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டாலும் தனது ஆள்காட்டி விரலை கட்டை விரலால் அழுத்தி கொண்டு தான் புகைப்படம் எடுத்திருப்பார்.

இவ்வாறு செய்ய என்ன காரணம் என்று பார்த்தால் ஞாபகம் சக்திக்காக இது போன்ற செய்வார்கள் அதை தான் ரஜினியும் செய்து இருக்கிறார்கள் என கூறி கமாண்ட் அடித்து வருகின்றனர். ஆள்காட்டி விரலை கட்டை விரலால் அழுத்தி இவ்வாறு செய்வதற்கு பெயர் கணேச முத்திரை  என கூறுவார்களாம். இதோ ரஜினி மற்ற பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட பொழுது அவர் செய்திருப்பதை நீங்களே கவனியுங்கள்..

rajini
rajini
rajini
rajini

Leave a Comment