வீட்டுக்கு திருட்டுத்தனமாக வரும் பழக்கம் விஜய்க்கு இருந்தது.? பழைய நினைவுகளை பகிர்ந்த எஸ் ஏ சந்திரசேகர்

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னனாக ஓடிக்கொண்டிருப்பவர் தளபதி விஜய்.  இவர் கடைசியாக நடித்த வாரிசு திரைப்படம் குடும்ப அடியன்ஸ் கொண்டாடும் படமாக இருந்ததால் அதிக நாட்கள் ஓடி 300 கோடிக்கு மேல் வசூலை வெற்றி கண்டது அதனை தொடர்ந்து லோகேஷ் உடன் கைகோர்த்து தனது 67 வது திரைப்படமான “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருவதால் தளபதி விஜயின் சம்பளமும் தற்பொழுது கணிசமாக உயர்ந்துள்ளது ஒரு படத்திற்கு சுமார் 100 கோடி மேல் சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட விஜய் பற்றி புதிய மற்றும் பழைய தகவல்கள் இணையதள பக்கங்களில் உலா வருவது வழக்கம்..

அதன்படி விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மகன் குறித்து பேசியது வைரல் ஆகி வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. எஸ் ஏ சந்திரசேகர் நல்ல படங்களை இயக்கி வெற்றி கண்டதால் அவருக்கு நல்ல வருமானம் வந்தது அதை வைத்து வீடு ஒன்றை கட்ட முடிவு செய்தார்.

அதன்படி விஜய்க்கு என ஒரு தனி அறை வைத்து புதிய வீடு கட்டினாராம்.  விஜயும் வீட்டின் பக்கத்திலேயே இருக்கும் பள்ளியில் படித்து விட்டு உடனே வீட்டுக்கு வந்து விடுவாராம். பள்ளி முடிந்ததும் பைப்பு வழியாக ஏறி தனது அறைக்கு சென்று விடுவாராம்.

இது தெரியாமல் ஏ சி ஏ சந்திரசேகரும், அவரது மனைவியும் எங்கே மகன் வரவில்லை என காத்துக் கொண்டிருப்பார்களாம் ஆனால் உடனே விஜய் ரூமில் இருந்து வெளியே வந்து  இவருக்கும் சப்ரைஸ் கொடுப்பாராம் இதனை எஸ். சி. சந்திரசேகர் தெரிவித்தார். இந்த தகவல் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக தற்போது மாறி உள்ளது.

Leave a Comment