‘வாரிசு’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் தங்களை அவாய்ட் பண்ணுனாரா? சோபா விளக்கம்

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடந்த நிலையில் அதில் ஏராளமான ரசிகர்கள் திரைப்பிரபலங்கள் பங்குப் பெற்றனர். அந்த வகையில் விஜயின் தாய் தந்தையும் கலந்துக் கொண்ட நிலையில் அங்கு தன் தாய், தந்தையை பெரிதாக கண்டுக் கொள்ளாமல் இருந்த விஜய் குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சை எழுந்தது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது விஜயின் அம்மா சோபா சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நிலையில் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் மிகவும் பிரம்மாண்டமான நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் வெளிவரும் படங்கள் அனைத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் கடைசியாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் வாரிசு இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் போன்ற பல மொழிகளிலும் வெளியாகி இருந்தது. அந்த வகையில் தெலுங்கில் வெளியான வாரிசு படம் பல சர்ச்சைகளை சந்தித்த நிலையில் இதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் குறைவான திரையரங்குகள் தான் வாரிசு படத்திற்காக ஒதுக்கப்பட்டது.

இவ்வாறு அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியானதால் விஜய் எப்பொழுதும் இல்லாமல் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தினார். அந்த வகையில் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் மிகவும் கோலாலமாக நடைபெற்ற நிலையில் அந்த நிகழ்ச்சியில் விஜயின் தந்தை எஸ் சி மற்றும் அவருடைய தாய் சோபாவும் கலந்துக் கொண்டனர்.

விஜய் வருவதைப் பார்த்து சோபா ஏக்கத்துடன் நின்று நிலையில் ஆனால் விஜய் அவர்கள் கண்டு கொள்ளவில்லை என பல வதந்திகள் வைரலானது. மேலும் விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகருக்கும் பிரச்சனை அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

இப்படிப்பட்ட நிலையில் இதற்கு சோபா விளக்கம் கொடுத்த நிலையில் அவர் கூறியதாவது வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நாங்கள் சிறப்பு விருந்தினர்களாக தான் சென்றிருந்தோம் அங்கு விஜய் ரசிகர்களை கவனிப்பதுதான் வேலையை தவிர எங்களை இல்லை. அதனால் நாங்கள் எல்லோருடனும் ஒன்றாக இருந்தோம் நாங்கள் வீட்டில் தினமும் பேசி கொள்கிறோம் பார்த்துக் கொள்கிறோம் அதனால் பொதுவெளியிலும் அவர் எங்களை கவனிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது நாங்கள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தான் சென்றோமே தவிர மற்றபடி செய்திகள் தகவல் உண்மை இல்லை என கூறியுள்ளார்.

Leave a Comment