அடேங்கப்பா இத்தனை நடிகர் மற்றும் நடிகைகளின் காதல், திருமணம் வரை சென்று நின்று விட்டதா.! அட லிஸ்டில் இந்த நடிகையும் உண்டா. !

பொதுவாக சினிமா என்றாலே சர்ச்சைகள் இருக்கதான் செய்யும் அதுவும் பிரபலங்களுக்கு சர்ச்சை என்பது சகஜமான ஒன்றுதான், அப்படி பல பிரபலங்கள் சினிமாவில் சர்ச்சையை சந்தித்தது அனைவருக்கும் தெரியும் ஆனால் அவர்கள் நிஜமாகவே நிஜ வாழ்க்கையிலும் இப்படி சர்ச்சையை சந்தித்து உளளார்கள் என்றால் நீங்கள் நம்புவீர்களா, அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் நடிகைகள் காதலித்து சர்ச்சைகளால் பாதியிலேயே நின்றுபோன திருமண ஜோடிகளைப் பற்றி பார்க்கலாம்.

நயன்தாரா மற்றும் பிரபுதேவா.

நாம் முதன்முதலில் பார்க்க இருப்பது தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாராவும் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பல திறமைகளை கொண்ட பிரபுதேவா காதலைப் பற்றி பார்க்கலாம். பிரபுதேவா மற்றும் நயன்தாராவுக்கு இடையே காதல் மலர்ந்து கல்யாணம் வரை சென்றது ஆனால் பிரபுதேவாவின் மனைவி இவர்களின் காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

அதனால் பிரபுதேவா மற்றும் நயன்தாராவுக்கு இடையே மலர்ந்த காதல் திருமணம் வரை சென்று நின்று விட்டது அதன் பிறகு நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனுடன் காதல் தஞ்சம் அடைந்துள்ளார்.

சிம்ரன்-ராஜசுந்தரம்

இடுப்புக்கு பெயர் போனவர் சிம்ரன் இவரின் நடனத்திற்கு பல ரசிகர்கள் அடிமை என்றே கூறலாம் அந்தளவு இவர் நடனம் ஆடுவார், இந்தநிலையில் சிம்ரன் மற்றும் ராஜ் சுந்தரத்திற்கு இடையே காதல் மலர்ந்து கல்யாணம் வரை சென்றது, ஆனால் இவர்களின் காதலை கமலஹாசன் குறிக்கிட்டதால் ராஜசுந்தரம் விலகிக்கொணடார், ஏனென்றால் கமலஹாசன் சிம்ரன் படங்களில் நடிக்கும்போது அதிக நெருக்கமாக இருந்ததாக கூறப்பட்டது.

திரிஷா மற்றும் வருண் மணியன்.

இவர்களின் திருமணம் எங்கேஜிமெண்ட் வரை சென்று நின்று விட்டது, திரிஷாவை பற்றி சில காலங்களுக்கு முன்பு பெரும் சர்ச்சை ஏற்பட்டது அப்படி எழுந்த நிலையில் வருண் மணியன் திரிஷா பலரிடம் நெருங்கி பழகுவது நெருக்கமாக இருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை அதனால் இந்த கல்யாணம் நிறுத்தப்பட்டது, அதன் பிறகு வருண் மணியனுடன் வாழ முடியாது என திரிஷா விலகி விட்டாராம்.

சமந்தா-சித்தார்த்

சில காலங்களுக்கு முன் சமந்தா மற்றும் சித்தார்த் இருவருக்கும் காதல் மலர்ந்தது இந்த காதல் கல்யாணம் வரைகூட சென்றது ஆனால் சில பிரச்சனைகளால், இந்த கல்யாணம் நின்றுவிட்டது அதாவது சமந்தாவிற்கு நாகசைதன்யா அவருக்கும் இடையே ஏற்கனவே தொடர்பு இருந்ததால் சித்தார்த் இதிலிருந்து விலகிக் கொண்டார் என செய்திகள் வெளியாகியது.

சிம்பு-ஹன்சிகா

சிம்பு முதலில் நயன்தாராவை காதலித்தார் அந்த காதல் முறிவுக்கு வந்த பின்பு சிம்பு-ஹன்சிகா இடையே காதல் மலர்ந்தது இந்த காதல் கல்யாணத்திற்கு பேச்சுவார்த்தை நடைபெற்றபோது ஹன்சிகாவிடம் குஷ்பு பிரைன் வாஷ் செய்ததாகவும் இதனால் ஹன்சிகா சிம்புவை வேண்டாம் என ஒதுக்கி விட்டார் எனவும் தகவல் வெளியானது.

அசின்-சல்மான்கான்

சல்மான்கான் அசினுக்கு இடையே காதல் மலர்ந்து பின்பு கல்யாண பேச்சை எடுத்ததும் அசின் தந்தை முடியாது என மறுத்து விட்டாராம்.

ஸ்ரீகாந்த்-சுவாதி

நடிகை சுவாதி அஜித்தின் வான்மதி திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தார், அவர் ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்தார் இந்த காதல் கல்யாணம் வரை சென்றது ஆனால் வரதட்சனை அதிகமாக கேட்டதாகவும் அதனால் கல்யாணம் நின்றுவிட்டது.

விஜயலட்சுமி

விஜயலட்சுமி பிரண்ட்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார்,  விஜயலட்சுமிக்கும் சீமானுக்கு திருமணம் நடக்க இருந்தது ஆனால் இந்த கல்யாணம் பிரச்சினையில் முடிந்தது கல்யாணம் நடக்கவில்லை.

குஷ்பு-பிரபு

குஷ்புவுக்கும் பிரபுவுக்கும் திருமணம் நடக்க வேண்டியது ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை இவர்களின் காதல் முறிவிற்கு வந்தது. இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment