என்னது பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்கள் எடுக்க இத்தனை நாட்கள் தான் ஆனதா.? தேங்காய் உடைப்பது போல் போட்டு உடைத்த முக்கிய பிரபலம்.?

வெள்ளித்திரையில் பல பிரபலங்களும் வரலாற்று கதையை எப்படியாவது திரைப்படமாக எடுத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் முயற்சித்துப் பார்த்த கதை தான் பொன்னியின் செல்வன் ஆனால் இயக்குனர் மணிரத்னம் அவர்கள் தனது அசாத்திய திறமை மூலம் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்து விட்டார்.

இந்த வரலாற்று சார்ந்த கதை அவருக்கும் ஒரு கனவு திரைப்படமாகவே இருந்து வந்த நிலையில் தற்பொழுது அவரது ஆசையை நிறைவேற்றி விட்டார்.முதல் பாகம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து வருகின்ற 28ஆம் தேதி இரண்டாம் பாகம் பல திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இந்த இரண்டாம் பாகத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள்.

மேலும் இந்த இரண்டாம் பாகத்தில் புரமோஷனுக்காக பல நகரங்களில் படக்குழு சென்று வருகிறார்கள் அதில் கலந்து கொண்டுள்ள கார்த்தி இந்தத் திரைப்படம் எடுப்பதற்கு எவ்வளவு நாள் ஆகிச்சி என்பதை பற்றி கூறியதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.அதாவது இந்த திரைப்படம் எடுப்பதற்கு சுமார் 120 நாட்கள் மட்டுமே ஆனதாம் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் முழுவதுமே வெறும் 120 நாட்களில் மட்டுமே படம் எடுக்கப்பட்டது என நடிகர் கார்த்தி கூறியதாக இந்த தகவல் வைரலாகி வருகிறது.

அது மட்டுமல்லாமல் இந்த 120 நாட்களில் படம் எடுப்பது சும்மா சாதாரண விஷயம் இல்லை என்பது தெரிந்த ஒன்று தான்.இருப்பினும் இந்த 120 நாட்களில் நள்ளிரவு 2:30 மணி அளவில் கூட மேக்கப் போடுவதற்கு நடிகர்,நடிகைகள் தயாராகி விடுவார்களாம்.காலையில் 6:30 மணி அளவில் முதல் ஷார்ட் எடுக்கப்படும் அதில் ஆரம்பித்தால் இரவும் பகலுமாக படப்பிடிப்பு நடந்து கொண்டேதான் இருக்குமாம்.

குறிப்பாக இதில் பணி புரிந்த ஒவ்வொரு கலைஞர்களும் தங்களது தூக்கத்தை தொலைத்துவிட்டு வேலை பார்த்ததாக நடிகர் கார்த்திக் கூறியதாக தற்பொழுது இந்த தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ps
ps

Leave a Comment