ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் நடந்த பூஜையில் தனது மகன்களுடன் கலந்து கொண்டாரா தனுஷ்.? இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக தனது திறமையை வெளிப்படுத்தி வந்த பிரபலங்களில் ஒருவர்தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இவர் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வந்த 3 திரைப்படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

என்னதான் நடிகர் தனுஷின் மனைவியாக இருந்தாலும் சினிமாவில் இவருக்கு என்று ஒரு பெயர் இருக்கிறது ஆனால் தற்பொழுது தனுஷ் மற்றும் இவரும் சேர்ந்து வாழவில்லை என்றாலும் கூடிய சீக்கிரம் சேர்ந்து வாழ இருப்பதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் ஒரு பாடலை பாடி தன் பாடல் திறமையையும் வெளிப்படுத்தி வந்தார் அது மட்டுமல்லாமல் பல பாடல்களுக்கு பின்னணி பாடகியாக இருந்தும் வந்துள்ளார் மேலும் இவர் சமீபத்தில் லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

என்னதான் தனுஷுடன் ஒரு சில மன கஷ்டங்கள் இருந்தாலும் இவர் தனது இரண்டு மகன்களுடன் ஜாலியாகத்தான் இருப்பாராம் இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இவரது வீட்டில் பூஜை நடந்துள்ளது இதில் தனது இரண்டு மகன்களுக்கும் நெற்றியில் விபூதி பூசி கொண்டிருக்கும் நேரத்தில் எடுத்த புகைப்படமும் இணையத்தில் வெளிவந்துள்ளது.

aishwarya rajini

மேலும் இதனைப் பார்த்த ஒரு சில ரசிகர்கள் இரு மகன்கள் மட்டும் தான் வந்தார்களா அல்லது தனுஷும்  வந்துவிட்டு உடனே கிளம்பி விட்டாரா என பல வகையான கேள்விகளையும் எழுப்பி வருகிறார்கள் ஆனால் இந்த புகைப்படத்தில் தனுஷ் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது மிக வேகமாக வைரலாகி வருகிறது என்றே கூறலாம்.

aishwarya rajini

Leave a Comment

Exit mobile version