வலியால் துடிக்கும் யாஷிகாவிற்கு ஆறுதல் சொன்னாரா.. நடிகை வனிதா.? இதோ அவர் போட்ட பதிவு.

குணசித்திர கதாபாத்திரங்களின் மூலம் தலைகாட்டும் இளம் நடிகைகள் பலரும் சினிமா வாய்ப்பை கைப்பற்றுவதும் உண்டு அதற்கு முக்கிய காரணம் அவர் திறமை மற்றும் அவரது அழகு தான் என கூறப்படுகிறது. அந்த வகையில் மாடலிங் துறையில் வலம் வந்து கொண்டிருந்த யாஷிகாவிற்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன.

அதை சரியாக பயன்படுத்தி ஜாம்பி, இருட்டு-அறையில்-முரட்டு-குத்து போன்ற படங்களில் கவர்ச்சி காட்டினாலும் அதன்பின் சினிமாவை நன்கு புரிந்துகொண்டு தனது திறமையை காட்ட ஆரம்பித்தார். அந்த வகையில் இவர் கடமையை செய், உத்தமபுத்திரன் போன்ற படங்களில் வித்தியாசமான ரோலை தேர்ந்தெடுத்து நடித்தார் இப்படி ஓடிக்கொண்டிருந்த யாஷிகா ஆனந்த்

அதையும் தாண்டி இன்ஸ்டா பக்கத்தில் குட்டையான உடைகளை அணிந்து தனது அழகை காட்டியதால் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் மள மளமளவன்னு அதிகரித்தது இப்படி சினிமாவில் ஜொலித்த யாஷிகா. ஒரு வாரத்திற்கு முன்பு தனது நண்பர்களுடன் வெளியூர் சென்று பின் சென்னை திரும்பினார் அப்போது அவர்கள் வந்த கார் மிகப் பெரிய விபத்தில் சிக்கியது.

அதில் இவருடன் பயணித்த இரண்டு ஆண் நண்பர்கள் மற்றும் அவரது தோழி பவானி என்பவரும் இருந்தனர் ஆனால் இந்த சம்பவத்தின்போது அவரது தோழி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் அதிலும் யாஷிகாவுக்கு மிகப்பெரிய அடிபட்டது அவருக்கு இதுவரை 2, 3 சர்ஜரி செய்துள்ளனர் மேலும் ஆறு மாதம் ஓய்வில் இருக்கும்படி அறிவித்துள்ளனர்.

சமீபத்தில் யாஷிகா எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் எனது தோழி என்னை மன்னிக்க மாட்டாள். அவரது குடும்பம் என்னை மன்னிக்கும் என ஒரு பதிவைப் போட்டிருந்தார். இதை பார்த்த பிரபலங்கள் பலரும் அவருக்கு ஒரு சில அறிவுரைகளை கூறி வந்த நிலையில் தற்போது நடிகை வனிதா இதெல்லாம் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும் அதனால் தான் அது விபத்து.

இதற்கு உன்னை நீ குற்றம் சுமத்தி கொள்ளாதே என ஆதரவாக பேசி உள்ளார்.

vanitha
vanitha

Leave a Comment