தோனி இந்த ஒருவருடன் மட்டும் தான் மணி கணக்கில் பேசுவார்.? உண்மையை புட்டு புட்டு வைத்த CSK அணியின் தொடக்க வீரர்.

மகேந்திர சிங் தோனி சமீப காலமாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாட விட்டாலும் சிஎஸ்கே அணியில் தொடர்ந்து கேப்டனாக சிறப்பாக தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். எஸ் கே அணி அதிக முறை இறுதிப்போட்டி மற்றும் பிளே ஆப் சுற்றுக்கு கொண்டு செல்ல முக்கிய காரணம் தோனியின் பங்களிப்பு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

தற்போது நடக்க இருக்கிற மீதி போட்டிகளிலும் தோனி கேப்டனாக சிறப்பாக செயல்பட ரெடியாக இருக்கிறார் இந்த நிலையில் மகேந்திர சிங் தோனி குறித்து சிஎஸ்கே அணியின் தொடக்க வீரரான ருத்துராஜ் கெய்க்வாட் தோனி  பற்றிய சில செய்திகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் அவர் கூறுகையில்.. தோனி எப்பொழுதும் சரியாக திட்டமிட கூடியவர்.

இருப்பினும் வேறு ஒருவர் அவருக்கு சில அறிவுரைகளை கொடுத்தால் அதையும் பொறுமையாகவும் நிதானமாகவும் கேட்டுக்கொள்வார் அந்த வகையில் தோனி ஒரு வருடம் மட்டும் மணிக்கணக்கில் பேசுவார்.

அறிவுரை கொடுப்பதும் கேட்டுக்கொள்வதுமாக இருப்பார் தோனி . அந்த நபர் சென்னையைச் சேர்ந்த வீரர் தான் அவர் வேறு யாருமல்ல தென்ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆட்டகாரரும், சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் டு பிளிசிஸ் தானாம்.

இருவரும் நல்ல நட்பில் இருக்கின்றனர் அது எனக்கு நன்றாகவே தெரியும் மேலும் ஒருவரை ஒருவர் நன்கு மதிக்கின்றனர் இவர்கள் இருவரும் டிஸ்கஷனில் அமர்ந்தாள் மணிக்கணக்கில் பேசிக் கொள்வார்கள். சும்மா அஞ்சு நிமிஷம், ரெண்டு நிமிஷம் எல்லாம் கிடையாது ஒக்காந்து பேச ஆரம்பிச்சாங்கனா ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் பேசுவார்கள்.

இது மட்டுமின்றி பயிற்சியின் போதும் சரி, போட்டியின் போதும் சரி தோனி சில முக்கிய ஆலோசனைகள்  கேட்பார் மேலும் அதிக அட்வைஸ் செய்வார் அதை நான் பார்த்து இருக்கிறேன் என குறிப்பிட்டார்.

Leave a Comment