பாகிஸ்தான் வீரருக்கு தன்னுடைய CSK ஜெர்சியை கொடுத்து அசத்திய தோனி – இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்.

தல தோனி தனது கிரிக்கெட் பயணத்தை இந்திய அளவில் தொடங்கிய பொழுது இருந்து இப்பொழுது வரையிலும் அவர் வெற்றியை மட்டுமே அதிகம் சம்பாதித்தவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அவர் கேப்டனாக இந்திய அணியில் பொறுப்பு ஏற்றபின் பல்வேறு கோப்பைகளை வென்று அசத்தியுள்ளார் அது இந்திய அணிக்கு பெருமையையும் சேர்த்து உள்ளது.

2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை, ஆசிய கோப்பை, 2007ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பை மற்றும் பல்வேறு தொடரை கைப்பற்றிய வென்று காட்டியவர். மேலும் இக்கட்டான சூழ்நிலையிலும் சிறப்பாக பேட்டிங் செய்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு எடுத்துச் சென்றவர் தோனி எப்பொழுதும் கிரிக்கெட்டை நேசிப்பவர்.

கிரிக்கெட்டை நன்கு அறிந்துகொண்டு எப்பொழுது எந்த பவுலர், எந்த இடத்தில் பில்டிங் நிப்பாட்ட வேண்டும் எந்த நேரத்தில் அடித்து ஆட வேண்டும் என்பதை சரியாக கணித்து விளையாண்ட அதன் காரணமாகவே கிரிக்கெட்டில் இவரது பெயர் இன்னும் பேசப்பட்டு வருக்கிறது.

இந்திய அணியில் இவர் கேப்டனாக செயல்பட்டதையும் தாண்டி ஐபிஎல் – லும் ஒரு சிறந்த கேப்டனாக தல தோனி பார்க்கப்படுகிறார் சிஎஸ்கே அணியை வேற ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றவர் தோனி என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். கிரிக்கெட்டை எப்படி நேசித்தார் அதேபோல வீரர்களையும் நேசிப்பவர் இந்திய கிரிக்கெட் வீரர்களையும் தாண்டி மற்ற வீரர்களையும் சக மரியாதையுடன் நடத்த கூடியவர்.

அண்மையில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியின் பொழுது தல தோனி மெண்டராக இந்திய அணியை வழி நடத்தினார். பாகிஸ்தான் – இந்திய அணிகள் விளையாடின அப்போது இந்திய அணி தோல்வியை சந்தித்தது இருப்பினும் பாகிஸ்தான் வீரர்கள் தோனியை சந்தித்து பேசினார்கள்.

அவரும் அவர்களுடன் நட்பு ரீதியாக சிறப்பாகவே பேசினார் அப்போது ஹரிப் ராஃப் என்பவருக்கு தல தோனி அவர் சட்டையை அதாவது சிஎஸ்கே அணியில் விளையாடிய சட்டையை பரிசளித்துள்ளார். அந்த பாகிஸ்தான் வீரரும் தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் தனது தோனியின் டீச்சர்ட்டை  வெளியிட்டு தற்பொழுது மகிழ்ந்து வருகிறார் இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment