இதெல்லாம் சரிபட்டு வராது.. சிவகார்த்திகேயனை ஓரங்கட்ட தனுஷ் அமைத்த கூட்டணி.? கைகொடுக்குமா இந்த பிளான்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ் இவருக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் இருக்கிறார்கள், அதேபோல நடிகர் விஜய் சேதுபதிக்கும் ரசிகர் கூட்டம் இருக்கிறார்கள் இவர்கள் இருவரும் தமிழ்நாடு மட்டுமல்லாமல். மற்ற மாநிலங்களிலும் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்கள்.

இந்த நிலையில் தனுஷ் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி ஹாலிவுட் போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் படத்தை தயாரிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுகிறார், தனுஷ் திரைப்படம் வெளியாகிறது என்றால் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் வெளியாகிறது.

அதேபோல் விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்குப் பிறகு இந்தியாவில் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார் இப்படி இருக்கும் நிலையில் தனுஷ் மற்றும் விஜய்சேதுபதியை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க இருக்கிறார் நடிகர் மற்றும் இயக்குனர் அனுரக் கஷ்யப். தற்போது கோலிவுட் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி இதுதான்.

நயன்தாரா அதர்வா நடிப்பில் வெளியாகி திரைப்படம் இமைக்கா நொடிகள் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் அனுரக் கஷ்யப் இவர் ஹிந்தியில் பிரபல இயக்குனராக வலம் வருகிறார், இவர் தனுஷ் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து தமிழ் மற்றும் ஹிந்தியில் ஒரு புதிய திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

இந்த திரைப்படம் ஊரடங்கு தளர்வு பிறகு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறுகிறார்கள் இதனால் தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி  ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள், அதேபோல் தற்பொழுது இருவரும் மிகவும் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்கள் அதனால் பல திரைப்படங்கள் கையில் இருக்கும் வரையில் அனைத்தையும் நடித்து முடித்து விட்டுதான் இவர் திரைப்படத்தில் நடிப்பார் என தெரிகிறது.

தனுஷ் சிவகார்த்திகேயனை வைத்து தொடர்ச்சியாக படத்தை தயாரித்து வந்தார் ஆனால் ஒரு காலகட்டத்தில் இவர்கள் இருவருக்கும் முட்டிக் கொண்டது அதனால் விஜய்சேதுபதியை வைத்து நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை தயாரித்தார் அந்த திரைப்படம் ஹிட்டடித்தது. எனவே இனி சிவகார்த்திகேயனை வைத்து படத்தை தயாரிக்கமாட்டார் தனுஷ் என தெரிகிறது.

Leave a Comment