நானும் ஒரு மனுஷி தான் மிருகம் கிடையாது..! காருக்குள் வைத்த கேமராவால் பொங்கி எழுந்த தனுஷ் பட நடிகை..!

பொதுவாக சினிமா பிரபலங்கள் என்றாலே போதும் அவர்கள் எளிதில் வெளியே சென்று வர முடியாது ஏனென்றால் அவர்களுக்கு எங்கு பார்த்தாலும் ரசிகர் கூட்டம் அலைமோதுவது மட்டுமில்லாமல் அவளுடைய பிரைவேசி முற்றிலுமாக  முடக்கப்படுகிறது அது மட்டும் இல்லாமல் சில ரசிகர்கள் நடிகையிடம் எல்லை மீறியும் நடக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது ரசிகர்களின் தொந்தரவு தாங்க முடியாமல் பேட்டியில் ஒரே கத்தாக கருத்தியுள்ளார் நமது தனுஷ் பட நடிகை அதாவது நடிகை என்றால் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து விட வேண்டும் நாங்கள் மனிதர்களா இல்லை மிருகமா என்று ஆவேசமாக கத்தி பேசி உள்ளார் இவ்வாறு அவர் பேசிய வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை டாப்சீ. இவருடைய நடிப்பில் காஞ்சனா இரண்டாம் பாகம் மற்றும் ஆரம்பம் போன்ற பல்வேறு திரைப்படங்கள் வெளியான நிலையில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே இவர் நடித்திருந்தார் பின்னர் பாலிவுட் பக்கம் சென்று விட்டார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

மேலும் நடிகை டாப்ஸி அவர்கள் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்துக் கொண்டிருக்கும் பொழுது 10 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் பயணித்து வரும் எனக்கு படப்பிடிப்பு தளத்தில் கேமராவுக்கு முன்பு மட்டும் தான் போஸ் கொடுக்க முடியும் சாதாரணமாக வெளியில் செல்லும்போது எல்லாம் ரசிகர்கள் என்ற பெயரில் என்னிடம் போட்டோ எடுப்பது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

அதுமட்டுமில்லாமல் கார் கண்ணாடி முன் கேமரா வைத்து என்னை போட்டோ வீடியோ எடுக்கிறார்கள் அவர்களைப் பார்த்தால் எனக்கு எரிச்சலாக வருகிறது எனக்கான ஒரு சுதந்திரம் நடிகையாக இருக்கும் ஒரே காரணத்தினால் கிடைக்கவில்லை அதுமட்டுமில்லாமல் மிருக காட்சிகள் உள்ள மிருகமா நான் என்னை எல்லோரும் புகைப்படம் எடுப்பதற்கு. தயவுசெய்து இனிமேல் அப்படி செய்யாதீர்கள் என டாப்ஸி ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

Leave a Comment