மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் “தனுஷ்” – ஹீரோ யார் தெரியுமா.?

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலுமே நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ஓடுவதால் இவரது சினிமா பயணம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இவர் இந்த வருடத்தில் நடித்த படங்களான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்கள் வெற்றி பெற்றன.

அதனை தொடர்ந்து கூட தற்போது தனுஷ்  வாத்தி, கேப்டன் மில்லர் போன்ற படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் அதில் முதலாவதாக வாத்தி திரைப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீசாக இருக்கிறது இந்த படத்தில் தனுஷ் தனது மாறுபட்ட நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இப்படி ஓடிக்கொண்டிருக்கும் தனுஷ் இயக்குனர் வேலையையும் பார்ப்பது உண்டு.

அந்த வகையில் நடிகர் தனுஷ் பவர் பாண்டி என்னும் திரைப்படத்தை இயக்கினார் இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் பெற்றது அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கிய திரைப்படம் தான் நான் ருத்ரன் இந்த படம் சில காரணங்களால் அப்பொழுது நின்று போனது இருப்பினும் அந்த படத்தை தனுஷ் எடுத்தே ஆக வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு சுத்தினார்.

ஒரு வழியாக அதற்கான வேலைகளில் தற்போது இறங்கி உள்ளாராம் வாத்தி, கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து தனுஷ் அடுத்த வருடம் ஆரம்பத்திலேயே நான் ருத்ரன்  திரைப்படத்தை இயக்குவதற்கான வேலைகளை தொடங்குவார் என கூறப்படுகிறது.

நான் ருத்ரன் படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார் மேலும் அந்த படத்தில் முக்கியத்துவம் உள்ள ஒரு ரோலில் நடிகர் விஷ்ணு விஷாலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தற்பொழுது தனுஷ் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Leave a Comment