50 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்க ரெடியாகும் தனுஷ்.? பிரமாண்டமான கதையை உருவாக்கும் பிரபல இயக்குனர்.! யார் தெரியுமா..

தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அதில் தனது திறமையை வெளிக்காட்டி வெற்றிக்கனியை பெற்று வருபவர் தனுஷ். இவரது நடிப்பு சிறப்பாக இருக்கின்ற காரணத்தினால் தமிழை தாண்டி பாலிவுட் ஹாலிவுட் என வாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகிறார்.

அதேசமயம் தமிழிலும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாறன் திரைப்படம் சொல்லிக்கொள்ளும்படி வெற்றியை ருசிக்க வில்லை என்றாலும் அடுத்தடுத்த சிறந்த இயக்குனருடன் கைகோர்த்து நடித்து வருகிறார்.

தனுஷ் கையில் தற்போது வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன. இவை இப்படியிருக்க பிரபல நடிகரும் இயக்குனருமான ஆர். சுந்தர்ராஜன் தமிழ் சினிமா உலகில் இதுவரை பல்வேறு திரைப்படங்களில் காமெடியனாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர்.

அதே சமயம் இவர் பல படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளார் அந்த வகையில் ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோயில் கிழக்காலே, ராஜாதி ராஜா போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார் இப்பொழுது கூட மிக பிரமாண்ட பட்ஜெட்டில் ஒரு புதிய கதையை எழுதி வருகிறார் சுந்தர்ராஜன் மேலும் இந்த கதைக்கு ஏற்ப ஹீரோ நடிகர் தனுஷ் தான் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் பலரிடம் சொல்லி வருகிறாராம்.

r. sundharajan
r. sundharajan

கதையை சிறப்பாக எழுதி விட்டு நடிகர் தனுஷை சந்தித்து கதை விவாதத்தில் ஈடுபட போவதாக கூறியுள்ளாராம். 50 கோடி பிரமாண்ட பட்ஜெட்டில் இந்த படத்தை அவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது தனுஷ் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் ஒரு சூப்பரான படம் தமிழ் சினிமாவில் பார்க்கலாம் என தெரியவருகிறது.

Leave a Comment