பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு போட்டியாக களம் இறங்கும் தனுஷின் நானே வருவேன்.! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தகவல்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் தனுஷ் அவர் தற்போது மூன்று படங்களில் நடித்து முடித்து உள்ளார். இதில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது அதனைத் தொடர்ந்து அடுத்ததாக நானே வருவேன், வாத்தி ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளது.

இந்த நிலை நடிகர் தனுஷ் அவர்கள் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு வாத்தி படத்தின் ரிலீஸ் தேதியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். வாத்தி திரைப்படம் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாக உள்ளது என்று அதில் குறிப்பிட்டு உள்ளார். ஆனால் டிசம்பர் மாதம் வெளியாக உள்ள திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து உள்ளீர்கள். அனால் இந்த மாதம் வெளியாக உள்ள நானே வருவேன் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிடவில்லை.

இதனால் தனுஷ் ரசிகர்கள் நானே வருவேன் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தனர். அதன் படி நடிகர் தனுஷ் தற்போது நானே வருவேன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து உள்ளார்.

அதாவது ரசிகர்களின் வேண்டுகோள் இணங்க அதை பூர்த்தி செய்யும் விதமாக தற்போது நடிகர் தனுஷ் அவர்கள் தனது பிட்டர் பக்கத்தில் நானே வருவேன் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் தனுஷ் வில்லம்புவை வைத்துக்கொண்டு சீறிப்பாய்வது போல் அமைக்கப்பட்டுள்ள போஸ்டர் உடன் இந்த மாதம் செப்டம்பர் 29ஆம் தேதி நானே வருவேன் திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வெளியிட்டுள்ளார்.

மேலும் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது இதனால் இந்த இரண்டு படங்களும் ஒன்றுடன் ஒன்று போட்டியிடுவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

அதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் எதிர்பார்ப்பும் ரசிகர்களை கவர்ந்து வண்ணமே உள்ளது. அதேபோல் தனுஷின் நானே வருவேன் திரைப்படத்தையும் ரசிகர்கள் ரிலீசுக்கு எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள். இதனால் இரண்டு படமும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆவதால் எந்த படம் வெற்றி பெரும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதோ நானே வருவேன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment