நீங்க கோடி கோடியா தூக்கி கொடுத்தாலும் அதுபோல் மட்டும் நடிக்க மாட்டேன்.! தனுஷ் பட நடிகை ஒரே போடு.!

சினிமாவின் ஒரு நடிகை தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருவதற்கு படாதபாடு பட வேண்டியதாக உள்ளது. இவர்கள் முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என்றால் அழகு, கவர்ச்சி என இரண்டிலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். இந்த இரண்டிலும் இவர்கள் சிறந்து இருந்தால் மட்டுமே சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகைகளாக வலம் வருவார்கள். ஏனென்றால் இப்படி இருந்தால்தான் ரசிகர்களும் விரும்புகிறார்கள்.

ஆனால் ஒரு சில நடிகைகள் அழகாக இருந்தாலும் கவர்ச்சி காட்டாமல் இழுத்துப் போர்த்திக் கொண்டிருக்கும் படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பார்கள். இதே போன்ற ஒரு சில நடிகைகள் அழகாக இல்லை என்றாலும் கவர்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விடுவார்கள்.

அந்த வகையில் அழகாக இருந்தோம் கவர்ச்சி காட்டாததால் சினிமாவில் தற்போது வாய்ப்பு கிடைக்காமல் தள்ளாடி வருபவர் நடிகை சுரபி. இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி 2 இரண்டாவது கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

இதற்கு முன்பும் இவர் சில படங்களிலும் நடித்திருந்தார். தமிழ்,தெலுங்கு இரண்டு திரையுலகிலும் மாறி மாறி நடித்து சினிமாவில் மிகவும் பிஸியாக இருந்து வந்தார். பிறகு சில காலங்கள் கழித்து சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் ஒரு படத்தில் நடித்தால் முன்னணி நடிகையாக மட்டுமே நடிப்பேன் என்று அடம் பிடித்ததால் கிடைத்த வாய்ப்புகளும் போய்விட்டது.

இந்நிலையில் இவர் கவர்ச்சி நடிகையாக நடிப்பார் என்று சில வதந்திகள் இணையதளத்தில் வைரலானது. ஆனால் இது முற்றிலும் வதந்தி என்றே சுரபி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அந்த வகையில் கோடி ரூபாய் கொடுத்தாலும் எந்த படத்திலும் கவர்ச்சி நடிகையாக நடிக்க மாட்டேன் எனக்கு இருக்கும் நல்ல பெயரை கெடுத்துக்கொள்ள மாட்டேன் என்று தனது நெருங்கிய வட்டாரங்களில் கூறியுள்ளாராம்.

surabhi
surabhi

Leave a Comment