தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாறன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து ஒரு சூப்பரான படத்தை கொடுக்க தனுஷ் போராடி வருகிறார். இதற்கு முன்பு வெளிவந்த ஜகமே தந்திரம், கல்யாணம் கலாட்டா போன்ற படங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பேராமல் போனது.
அதனை தொடர்ந்து தனது படங்கள் தோல்வி அடைவதால் தனுஷ் மிகவும் சோகத்தில் உள்ளார். இந்த நிலையில் தற்போது தனுஷ் கையில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் நானே வருவேன் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூறு இயக்கத்தில் உருவாகிவரும் வாத்தி மற்றும் திருச்சிற்றம்பலம் போன்ற மூன்று படங்கள் கையில் இருக்கின்றன .
இந்த நிலையில் நடிப்பைத் தாண்டி தற்போது தனுஷிற்கு படங்கள் இயக்குவதிலும் ஆர்வம் வந்துள்ளன அதனால் ஏற்கனவே அவர் இயக்கி பாதியில் நிறுத்தப்பட்ட அவரது கனவு படத்தை மீண்டும் இயக்க உள்ளாராம். இந்த நிலையில் தனுஷ் அடுத்து மேலும் ஒரு தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி அமைக்க உள்ளாராம்.
தெலுங்கில் பாலய்யா நடித்த அகாண்டா என்ற திரைப்படத்தை இயக்கிய போயபடி ஸ்ரீனு இயக்குனருடன் இணைய உள்ளாராம். அவர் இயக்கிய இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பல நடிகர் நடிகைகளும் அவர் இயக்கத்தில் நடிக்க ஆசைப் படுகின்றனர்.
அந்த வகையில் தற்போது இயக்குனர் போயபடி ஸ்ரீனுவின் அடுத்த படத்தில் தனுஷ் மற்றும் அல்லு அர்ஜுன் இருவரும் இணைந்து நடிக்க உள்ளார்களாம். இந்த தகவல் தற்போது இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகின்றன. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை.


