வாத்தி திரைப்படத்திற்காக பக்கா பிளான் போட்டு காய் நகர்த்தும் தனுஷ்.! இதுவும் நல்லா தான் இருக்கு…

நடிகர் தனுஷ் அவர்கள் தற்போது வாத்தி திரைப்படத்தில் நடித்து முடிந்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற 17ஆம் தேதி வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். மேலும் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றம் நிலையில் நானே வருவேன் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வியை சந்தித்தது.

ஆனால் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படத்தில் தற்போது நடித்து முடித்து விட்டார் நடிகர் தனுஷ். இதனை தொடர்ந்து இந்த படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி கொண்டே இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் ஒன்று வெளியாகி இருந்தது.

இந்த ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்திற்காக மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். மேலும் வாத்தி திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில் ஒரு சில பிரச்சினைகள் காரணமாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸ் தேதி ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில் நாலை மறுநாள் வழியாக உள்ள வாத்தி திரைப்படத்துடன் தனுஷின் அண்ணனான செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள பாகாசுரன் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதுவரைக்கும் ஒற்றுமையாக இருந்து வந்த அண்ணன் தம்பி இருவரும் தற்போது முதன்முறையாக மோதிக் கொள்ள உள்ளார்கள் இதனால் இந்த இரண்டு திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் அவர்கள் தனது அண்ணனை ஜெயிக்க ஒரு புதிய யுத்தியை கையில் எடுத்து இருக்கிறார் அதாவது மிக அமைதியாக வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திருச்சிற்றம்பலம் திரைப்படத்தைப் போல வாத்தி திரைப்படத்தையும் அமைதியாகவே கொண்டு வந்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று திட்டம் திட்டி வருவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் காதல் எமோஷன் ஆக்சன் என அனைத்துமே இருப்பதை நாம் ட்ரெய்லரில் பார்த்திருப்போம் இதை தான் நடிகர் தனுஷ் அவர்கள் இந்த திரைப்படத்தில் ஒரு யுக்தியாக கையாண்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Leave a Comment