மறுபடியும் பொன்னியின் செல்வன் உடன் மோத போகும் தனுஷ்.! வாத்தி படத்தின் புதிய அப்டேட்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ் இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படம் அதிலும் குறிப்பாக திருச்சிற்றம்பலம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது ஆனால் நானே வருவேன் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு தோல்வியை சந்தித்தது.

ஏனென்றால் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்துடன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான நானே வருவேன் திரைப்படம் மோதிக்கொண்டது. வரலாறு காணாத அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து நானே வருவேன் திரைப்படம் உருவான செலவை கூட வசூல் செய்ய முடியாமல் திணறியது.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக தற்போது நடிகர் தனுஷ் அவர்கள் வாத்தி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்தாண்டு வெளியாகி ரசிகர்கள் மதியம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வாத்தி படத்தின் பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து வாத்தி படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த நேரத்தில் அவதார் 2 படம் வெளியானதால் வாத்தி படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி மாதம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் பிப்ரவரி மாதம் ஒத்திவைக்கப்பட்ட வாத்தி படம் தற்போது டிசம்பரில் மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து தனுஷின் வாத்தி திரைப்படமும் ஏப்ரல் மாதம் வெளியாவது தற்போது உறுதி செய்யப்பட்ட தகவலாக வெளியாகி இருக்கிறது இதனால் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும் வாத்தி திரைப்படமும் ஒரே நேரத்தில் மோத உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பொன்னியின் செல்வன் முதல் பாகத்துடன் மோதி தோற்றுப்போன தனுஷ் மறுபடியும் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகத்துடன் மோத உள்ளது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இந்த தகவல் தனுசு ரசிகர்களுக்கு ஒரு சோகம் அளிக்கும் தகவலாக வெளியாகி இருக்கிறது.

Leave a Comment