உருவக கேள்விக்கு தனுஷ், விஜய் சேதுபதியை ஒப்பிட்டு பதிலடி கொடுத்த சூர்யா பட நடிகை.!

பொதுவாக சினிமாவில் அழகாக இருந்தால் மட்டும் தான் ஒருவர் முன்னேற முடியும் என கூறி வந்த காலகட்டம் மாறி தற்பொழுது அழகு இல்லை என்றாலும் திறமை இருந்தால் சாதியத்து காட்ட முடியும் என நிரூபித்துக் காட்டிய பிரபலங்கள் பலர் உள்ளார்கள் இப்படிப்பட்ட நிலையில் பிரபல நடிகை ஒருவரை பலரும் உருவ கேலி செய்து வந்த நிலையில் இவர் தனுஷ், விஜய் சேதுபதி இருவரையும் ஒப்பிட்டு அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் இது பற்றிய தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூர்யா தொடர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்து வரும் நிலையில் இவருடைய நடிப்பில் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றினை பெற்ற திரைப்படம் தான் சூரரைப் போற்று. இந்த திரைப்படத்தினை சுதா கொங்ரா இயக்க சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார்.

மேலும் இந்த திரைப்படம் ஆறு தேசிய விருதுகளை பெற்றது அதில் சிறந்த நடிகைக்கான விருதை அபர்ணா பாலமுரளி பெற்றார், இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர் தமிழில் எட்டு தோட்டங்கள், தீதும் நன்றும், சர்வம் தாளமயம், வீட்ல விசேஷம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நித்தம் ஒரு வானம் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பதை குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட நிலையில் சமீப பேட்டி ஒன்றில் இவருடைய உருவ கேள்வி பற்றிய கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் இதற்கு பதில் கூறியுள்ளார். அதாவது பலரும் இவரை விமர்சித்து வரும் நிலையில் ஒருவரின் எடை அதிகரிப்பது என்பது அவரின் உடலில் உள்ள பிரச்சனைகள் தான் காரணம். நான் இப்படி குண்டாக இருந்தால் இதே தோற்றத்துடன் என்னை படத்தில் நடிக்க அழைப்பார்கள்.

ஆனாலும் சிலர் ஒல்லியான நடிகைகளை மட்டுமே ஹீரோயின்களாக பார்க்கிறார்கள் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்கும் தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி போன்றவரின் திறமைக்கு முன்னால் தோற்றம் ஒன்றுமே இல்லை. ஹீரோக்களுக்கு மட்டும் எந்த ஒரு பாகுபாடும் பார்க்காமல் அவருடைய திறமைகளை பார்க்கிறார்கள் ஆனால் ஹீரோயின்களை பொறுத்தவரை அவர் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பது மிகவும் தவறான ஒன்று என கூறியுள்ளார்.

Leave a Comment