தனுஷ் காட்டில் இனி அடை மழைதான். பட்டையை கிளப்பப் போகும் அடுத்தடுத்து நான்கு திரைப்படங்கள்.!

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது தனுஷ் நான்கு புதிய திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்று தகவல் இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்தியில் ரே என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஹாலிவுட் படமான தி கிரேன் மேன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் இத்திரைப்படத்தின் சூட்டிங்கிற்காக அமெரிக்கா சென்று உள்ளார் என்ற தகவல் நாம் அனைவருக்கும் தெரியும்.  அதோடு மட்டுமல்லாமல் கர்ணன் திரைப்படத்தை தனது குடும்பத்துடன் இணைந்து அமெரிக்கா தியேட்டரியில் தான் பார்த்தார்.

இதனைத் தொடர்ந்து தனுஷ் புதிதாக 4 திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அந்த வகையில் முதலாவதாக, துருவங்கள் பதினாறு, மாபியா போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் நரேன் தனுஷின் 43ஆவது திரைப்படத்தை இயக்க உள்ளார்.

43வது திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு செல்வராகவன் இயக்கவுள்ள தனது 44வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவாக உள்ள இத்திரைப்படத்திற்கு நானே வருவேன் என்ற பெயர் வைத்துள்ளார்கள்.

இந்நிலையில் செல்வராகவன் இத்திரைப்படத்திற்காக மற்ற நடிகர் நடிகைகளை தேடி வருகிறார்.  இதனைத் தொடர்ந்து  ராம்குமார் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். பிறகு தற்பொழுது கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் சாணி காகிதம் திரைப்பட இயக்குனரான அருண் மகேஸ்வரன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் தனுஷை வைத்து இயக்கலாம் என்ற பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

Leave a Comment