விரக்தியில் தேசிய விருது நடிகை.! சும்மா ஜில்லுனு சந்தோசமாக இருக்கும் ஒல்லி இசையமைப்பாளர்.. காரணம் இதுவோ.?

கேரளாவை பூர்வமாக கொண்ட இந்த இளம் நடிகை சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தற்போது அவரும் முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றுள்ளார். ஆரம்பத்தில் க்யூட்டான கதாநாயகியாக நடித்து வந்த இந்த இளம் நடிகை சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பேன் என்று உறுதியோடு இருந்து வருகிறார்.

சினிமாவில் அறிமுகமான குறுகிய காலகட்டத்தில் தனது சிறந்த நடிப்பால் தேசிய விருதையும் பெற்றார். தற்போது அந்த இளம் நடிகை பாலிவுட்டில் நடிக்க வேண்டுமென்ற ஆசையால் உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.

சமீப காலங்களாக  இந்த இளம் நடிகை நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் தோல்வியை சந்தித்து வருகின்றன. இதனால் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற அந்த இளம் நடிகை எனது வாழ்க்கையில் இது மிகவும் மோசமான காலங்கள் ஆனாலும் என்னுடைய முயற்சியை கைவிடுவதில்லை இந்த சோதனையிலிருந்து மீண்டு வருவேன் என்று கூறியுள்ளார்.

இந்த நேரத்தில் என்னுடன் துணையாக இருந்த இயக்குனர்களும் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார் அந்த நடிகை. அதே சமயத்தில் அதே நாளில் ஒல்லி இசையமைப்பாளரும் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஒரே நேரத்தில் இருவரும் அறிக்கையை வெளியிடுகிறார்கள் இவர்கள் இடையே அது இருக்குமோ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

அந்த ஒல்லி இசையமைப்பாளரும், தேசிய விருது பெற்ற இந்த இளம் நடிகையையும் காதலித்து வருவதாகவும் அடிக்கடி இவர்கள் இருவரும் பார்ட்டி டேட்டிங் என சுற்றி வருவதாகவும் தகவல் பரவி வருகிறது. மேலும் ஒல்லி இசை அமைப்பாளருக்கு  விரைவில் திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர் முடிவு செய்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கூட அம்மணி விரக்தியில் இருப்பாரோ என்று கூறுகின்றனர்.

Leave a Comment