கண்டிப்பாக தனி ஒருவன் 2 உருவாகும்.! இயக்குனர் மோகன்ராஜ் அதிரடி அறிவிப்பு.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவருடைய அண்ணனும் இயக்குனருமான மோகன் ராஜா அவர்கள் பல ரீமேக் படங்களை இயக்கி வந்தார். அதன் பிறகு முதல் முறையாக ஸ்கிரிப்ட் எழுதி இயக்கிய படம் தனி ஒருவன். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாவம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் சொப்பன சுந்தரி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மோகன் ராஜாவிடம் தனி ஒருவன் 2 மற்றும் வேலாயுதம் 2 குறித்து கேள்விகள் எழுந்தது. இதற்கு பதில் அளித்த மோகன் ராஜா தனி ஒருவன் 2 விரைவில் உருவாகும் எனக் கூறியிருந்தார்.

தற்போது நடிகர் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன், அகிலன் உள்ளிட திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார் அதனால் தனி ஒருவன் 2 எடுக்க முடியாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் தனி ஒருவன் 2 திரைப்படம் விரைவில் உருவாகும் என இப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி அவர்கள் தெரிவித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தனி ஒருவன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாவது பாகம் எப்போது உருவாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது இந்த அப்டேட் கிடைத்ததும் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது மேலும் இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நயன்தாரா, அரவிந்த் சாமி, தம்பி ராமையா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதை நாம் அனைவரும் தெரிந்து ஒன்று.

ஆனால் இந்த திரைப்படம் எப்போது உருவாகும் என மோகன் ராஜா கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து விஜயின் வேலாயுதம் 2 திரைப்படம் உருவாகும் என அந்த நிகழ்ச்சியில் கூறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment