ரன்வீர் சிங் கையை பிடிக்க மறுத்த தீபிகா படுகோன்.! கடுப்பின் உச்சத்தில் வேகமாக நடந்து சென்ற நடிகர்..

பாலிவுட் திரைவுலகில் முன்னணி பிரபலங்களாக வலம் வந்து கொண்டிருக்கும் தீபிகா படுகோன் நடிகர் ரன்வீர் சிங் கையை பிடிக்க மறுத்துள்ள நிலையில் அது குறித்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த ஆறு வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் பிறகு 2018ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர்.

இந்நிலையில் இவர்கள் சமீபத்தில் தீபிகா படுகோன்-ரன்வீர் சிங் தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக தற்பொழுது பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

இவருடைய நெருங்கிய வட்டாரங்கள் இவர்கள் ஒன்றாக தான் வாழ்ந்து வருகிறார்கள் எனவும் பிரிந்து வாழவில்லை எனவும் கூறி வருகிறார்கள். இதனை அடுத்து இருவரும் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் நிலையில் மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரன்வீர் சிங் தீபிகா படுகோனுடன் கலந்துக் கொண்டார்.

ranveer singh 1
ranveer singh 1

அதில் இருவரும் சிவப்பு கம்பளத்தில் நடந்து வரும் பொழுது தீபிகாவின் கையை ரன்வீர் சிங் பிடிக்க முயன்றார் ஆனால் தீபிகா படுகோன் கையை பிடிக்க மறுத்து விட்ட நிலையில் அது மட்டும் அல்லாமல் அவருடைய முகத்தைக் கூட பார்க்கவில்லை.

ranveer singh
ranveer singh

எனவே அவருடைய முகம் மிகவும் கோபத்தில் இருப்பது போல் இருந்தது. எனவே இதனால் கடுப்பான ரன்வீர் சிங் தீபிகா படுகோனை விட்டுவிட்டு முன்னாள் வேகமாக நடந்து சென்றார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இடையே ஏதாவது பிரச்சனையா? இல்லை இருவரும் விவாகரத்து செய்து விட்டார்களா? என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Comment