சமந்தா பட இயக்குனருடன் கைகோர்த்த சியான்.! அதும் எத்தனை மொழிகளில் உருவாகிறது தெரியுமா.?

நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.இப்படிப்பட்ட நிலையில் இவர் நடிப்பில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது இவர் நடிகை சமந்தா படத்தை இயக்கிய இயக்குனருடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.மேலும் இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகிறார்கள்.

அதாவது தற்பொழுது நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் தான் கோப்ரா இந்த திரைப்படம் வருகின்ற 31ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது மேலும் அவர் நடித்த மற்றொரு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் அடுத்த மாதம் 30ஆம் தேதி அன்று ஏராளமான திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இவ்வாறு சியான் விக்ரம் அவர்களின் நடிப்பில் அடுத்த அடுத்த திரைப்படங்கள் இரண்டு மாதங்களில் போல் வெளியாகும் நிலையில் அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்தில் விக்ரம் இணைந்துள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதும் கூறப்படுகிறது. இந்தத் திரைப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் பவன் குமார் அவர்கள் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்திலும் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் அந்த திரைப்படம் தமிழ் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் உருவாகத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

vikram
vikram

இயக்குனர் பவன் குமார் அவர்கள் இதற்கு முன்பு யூ டர்ன் படத்தை இயக்கியிருந்தார் மேலும் அந்த திரைப்படத்தில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றினை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் பவன் குமார் தற்பொழுது பகத் பாசில் நடித்து வரும் படத்தினை இயக்கி வரும் நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்தவுடன் விக்ரம் படத்தை இயக்குனர் குறிப்பிடுகிறது.

Leave a Comment