இந்த ரெண்டு பேர் இருக்குற வரைக்கும் CSK அணி தோத்துகிட்டே தான் இருக்கும்.? புலம்பும் ரசிகர்கள்

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் சீசன் சீசன்னாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் 31ஆம் தேதி ஆரம்பித்தது.  10 அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன முதல் நான்கு இடத்தை பிடிக்கும் அணி அடுத்த சுற்றுக்கு தகுதியாகும் இதனால் ஒவ்வொரு ஆட்டத்திலும் அனல் பறந்து கொண்டிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அடுத்த சுற்று கூட போக முடியாமல் திணறியது இதனால் இந்த ஆண்டு சிஎஸ்கே கண்டிப்பாக இறுதி போட்டிக்கு நுழைந்து கோப்பையை வெல்லும் என பலரும் கணித்துள்ளனர் ஆனால் கடந்த சில போட்டிகளாக சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது.

சிஎஸ்கே அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்தாலும் ஒரு சில வீரர்கள் சோதபுலான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே சிஎஸ்கே அணி தோல்வி அடைவதற்கான காரணம் என கூறப்படுகிறது அந்த வகையில் சிஎஸ்கே அணியில் அம்பத்தி ராயுடு மோசமான பார்மில் இருப்பதால் அவர் சொல்லு கொள்ளும்படி ரன் அடிக்கவில்லை உடனே விக்கெட்டை இழந்து விடுகிறார்.

இது சிஎஸ்கே அணி பெரும்பாதிப்பை கொடுத்தது இவரை போலவே இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான மொயின் அலி சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார் இவர்  தொடர்ந்து பத்து பதினைந்து ரன்கள்  அடிக்கிறார் அதன் பிறகு அந்த ஸ்கூரை உயர்த்த முடியாமல் விக்கெட்டை இழந்து விடுகிறார் எனவே இந்த இரண்டு வீரருக்கு பதிலாக மாற்று வீரர்களை இறக்க வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.

மிட்சல் சான்டர் சிறப்பாக பந்து வீசுகிறார்  அவர் விக்கெட் எடுப்பதோடு மட்டுமல்லாமல் ரண்களையும் கட்டுப்படுத்துவதால் மொயின் அலிக்கு பதிலாக அல்லது அம்பத்தி ராயுடுக்கு பதிலாக அவரை களம் இறக்குவது சிஎஸ்கே அணிக்கு வெற்றி வாய்ப்பை பெற்று தரும் என பலரும் கூறி வருகின்றனர் நாளை மதியம் 3.30 மணிக்கு சென்னை அணி லக்னோ அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment