என்னை விமர்சியுங்கள் : என் மகளை விமர்சித்தால் நான் சும்மாவே இருக்க மாட்டேன்.! சரமாரியாக பேட்டியில் பேசிய அபிஷேக் பச்சன்.

ஹிந்தி சினிமாவில் தவிர்க்க முடியாத நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இவர்கள் இருவரும் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து உள்ளார்.

அதிலும் மாடல் அழகி ஐஸ்வர்யா ராய் இந்தியாவை தாண்டி உலக அளவில் கோடிக்கணக்கில் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பதால் அவர் இன்றளவும் பிரபலமாக வலம் வருகிறார். அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் இவர்கள் இருவருக்கும் ஆராத்யா என்ற ஒரு மகள் இருக்கிறார்.

இவர் அண்மையில் தனது பத்தாவது பிறந்த நாளை அவரது பெற்றோர்களான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் மாலத்தீவில் கொண்டாடினார் அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் தீயாக பரவியதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆராத்யாவுக்கு  வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஆனால் ஒரு சிலரோ ஆராத்யாவை பார்த்து கேலியும் கிண்டலும் பண்ணி உள்ளனர். ஆரம்பத்தில் பொறுமையாக இருந்த அபிஷேக்பச்சன் தனியார் பேட்டி ஒன்றில் இதுகுறித்து அவர் பேசி உள்ளார் அவர் கூறியது. ஆராத்யாவை கேலி செய்வதை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன் அது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒரு விஷயம் ஒரு பிரபலமாக நான் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு ஆகவேண்டும் ஆனால் என் மகள் கேலி செய்வதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது எனது மகளை கேலி செய்பவர்கள் தைரியம் இருந்தால் என் முன்னாடி முகத்துக்கு நேரே அதை செய்து பார்க்கட்டும் என்று அபிஷேக் தெரிவித்தார்.

Leave a Comment