பணத்தை வாரி இறைப்பதில் கவுண்டமணி, செந்தில் NO.1..! அதன்பிறகு தான் நடிகர்கள் எல்லாம்.

நடிகர்களை போல சினிமாவில் நிரந்தர இடத்தை பல ஆண்டுகளாக  வருபவர்கள் தான் காமெடியர்கள் அப்படி 80, 90 காலகட்டங்களில் காமெடியில் மிகப் பெரிய ஜாம்பவான்களாக வலம் வந்தவர்கள் கவுண்டமணி / செந்தில்.

இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காமெடிகள் ஒவ்வொன்றும் இன்றும் மக்களை சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கின்றன.

அதிலும் குறிப்பாக 1989ம் ஆண்டு வெளியான கரகாட்டக்காரன் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காமெடிகள் இன்றும் மக்கள் மற்றும் ரசிகர்க்களுக்கு பிடித்து போன ஒன்றாக பார்க்க படுகிறது.

சினிமாவையும் தாண்டி செந்தில், கவுண்டமணி நல்ல நண்பர்களாக இருந்து வந்தனர்.

மேலும் படப்பிடிப்பு தளத்தில் யாருகாவது உடம்பு சரி இல்லை அல்லது அடிபட்டால் உடனே பணத்தை வாரி இறைப்பார்கள் அதுவும் 80 90 காலகட்டங்களில் 500 ரூபாய் என்பது பெரிய விஷயம்.. காசை பார்க்காமல் உதவிகளை வாரி வழங்குவார்கள்.

மேலும் பட சூட்டிங் ஸ்பாட்டில் கவலையாக இருந்தால் என்ன எது என்று கேட்டு பணத்தையும் கொடுத்துவிட்டு பெரிய காமெடி காட்சிகள் இருந்தால் அதையும் தள்ளிவைத்து விடுவார்களாம்.

சமீப காலமாக இவர்கள் இருவரும் படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் ஒன்றாக சேர்ந்து நடிக்காமல் இருந்த வந்தனர் தற்போது தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் விதமாக கவுண்டமணி “வாய்மை” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதுபோல செந்திலும் “பிஸ்தா” என்ற திரைப்படத்தில் தற்போது கமிட்டாகி நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து நடிக்கவில்லை என்றாலும் சினிமாவில் இவர்களைப் பார்த்தால் போதும் என ரசிகர்கள் தற்போது நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Comment

Exit mobile version