அமிதா பச்சனை தொடர்ந்து பிரபல முன்னணி பாலிவுட் நடிகருக்கு கொரோனா.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூருக்கு கொரோனா தோற்று உறுதிசெய்யப்பட்டது.

சமீபத்தில் தான் பிரம்மாஸ்திரம் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் நடிகை ஆலியா பட் உடன் ரன்பீர் கபூர் பங்கேற்றார்.

கடந்த மார்ச் மாதம் இந்தியா முழுவதும் கொரோனா  அதிகமாக இருந்தது.  நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டது.  சினிமா உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டன இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தை மக்கள் ஒரு வித பயத்துடன் இருக்கின்றனர்.

மகராஷ்டிராவில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது.  முக கவசம் அணிவது சமூக இடைவெளியை கடைப்பிடித்தால் உள்ளிட்டவை மீண்டும் நாடு முழுவதும் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டு வருகிறது.

நடிகர் ரன்பீர் கபூர் சில நாட்களாக வெளியே வராமல் இருந்து வந்த நிலையில் சில மீடியாக்கள் அனைத்தும் அணுகி கேள்வி எழுப்ப ரன்பீர் கபூருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளதாக அவரது மாமா ரந்தீர் கபூர் பதிலளிக்கிறார்.

ranbir kapoor
ranbir kapoor

ரன்பீர் கபூர் தனது காதலியுடன் இணைந்து நடித்து வரும் பிரம்மாஸ்திர படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.  பெரிய காளி தேவியின் சிலைக்கு முன்பாக எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என இருவரும் இணைந்து வேண்டிக்கொண்ட எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிய நிலையில்,  இந்தப் படத்தின்  படப்பிடிப்பு தள்ளிப் போயுள்ளது.

Leave a Comment