மேலும் ஒரு அதிமுக அமைச்சருக்கு கொரோனா.! கலக்கத்தில் தொண்டர்கள்..

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது, இந்த வைரஸ் பல நாடுகளை தாக்கி விட்டு இந்தியாவையும் தாக்கி வருகிறது இந்த வைரஸால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. அதேபோல் இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்தை நெருங்கி விட்டது.

அந்தவகையில் தமிழ்நாட்டில் மட்டும் ஒன்றரை லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், சாதாரண பொதுமக்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள் அரசியல் பிரபலங்கள் என அனைவரையும் தாக்கி கொண்டே வருகிறது இந்த கொரோனா வைரஸ்.

அந்த வகையில் சமீபத்தில் திமுகவை சேர்ந்த எம்எல்ஏ அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார், அவரைத் தொடர்ந்து மேலும் இரண்டு திமுக எம்எல்ஏ கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டார்கள். மேலும் இந்த லிஸ்டில் அதிமுக எம்எல்ஏ வும் சிலர் பாதிப்படைந்து உளளார்கள். உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன், மின்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோருக்கு கொரோனா இருப்பது அதிகாரபூர்வமாக உறுதியாகியது.

இவர்களைத் தொடர்ந்து தற்பொழுது கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பலரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

rajee
rajee

Leave a Comment