டிக் டாக் மூலம் கொரோனா வைரஸை பரப்பிய அரியலூர் பெண்.! மக்கள் வேதனை

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது, இந்த வைரஸ் உலக நாடுகளையே நடுநடுங்க வைத்துள்ளது இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது, இந்த நிலையில் வெளிநாடுகளிலிருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வந்த 32 பேர் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்கள்,

இந்த நிலையில் அரியலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஓட்டுனருக்கு ஒரு மகளும் மகனும் இருக்கிறார்கள் இவர் கோவையில் உள்ள தனியார் மாலில் பணியாற்றி வந்துள்ளார், பின்பு சென்னையில் வேளச்சேரியில் மாலில்  பணிபுரிந்துள்ளார், அவருக்கு கடந்த சில நாட்களாக தொண்டை வலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதோடு உடல் நிலை மோசமான நிலை காணப்பட்டாதால் அந்தப் பெண் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அவரை அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தார்கள். இந்த நிலையில்  அவரின் குழந்தை, தந்தை தாய் தம்பி, அண்ணன், என அவரின் குடும்பத்தை சேர்ந்த 14 பேரை தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்து வந்தனர்.

இந்தநிலையில் அரியலூரில் கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண் செல் போனில் டிக் டாக் செய்து வீடியோவை பதிவிட்டுள்ளார், அப்பொழுது கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இரண்டு தூய்மைப் பணியாளர்கள் மேலும் ஒருவர் இவரது செல்போனை வாங்கி பயன்படுத்தி உள்ளார்கள்.

கொரோனா பாதித்த பெண்ணின் செல்போனை வாங்கி பயன்படுத்தியதால் இந்த மூவரும் பணிநீக்கம் செய்து தனித் தனி வார்டில் தனிமை படுத்தியுள்ளார்கள், இது அரியலூர் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment