நடிகர் அல்லு அர்ஜுன்னுக்கு கொரோனா தொற்று.! ரசிகர்களுக்கு அட்வைஸ்.

கொரோனா தொற்று இரண்டாவது அலை தற்பொழுது வேகம் எடுத்து உள்ளதால் இந்திய முழுவதும் பல்வேறு விதமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன இருப்பினும் கொரோனா வேகம் எடுத்துள்ளது சில நாட்களாக லட்சக்கணக்கான பேர் இதில் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பிக் கொண்டே வருகின்றன அதனால் ஆக்சிஜன் தட்டுப்பாடுகளும் தற்போது நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது.

இதை உணர்ந்து கொண்ட அரசு மற்றும் பிரபலங்கள் பலரும் தன்னால் முடிந்த பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர் அதனால் அதன் பற்றாக்குறை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தாலும் அதிகமாகி வரும் இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் நிலவுகிறது.

இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கோரோன்னா தொற்று ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதால் அவர் தற்போது தனிமை படுத்தப்பட்டு உள்ளார் மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ளுமாறு தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

மேலும் எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் ரசிகர்களை அறிவுரை சொன்னார். தன்னைப்பற்றி கவலைப்பட வேண்டாம் எனவும் நலமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் கொரோன்னா இரண்டாவது அலை தொற்றால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது அதனை தவிர்க்க மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்குமாறு அந்தந்த மாநில அரசுகள் தெரிவித்து வருகின்றனர் அரசு சொல்வதை கேட்போம் நம் உயிரை நாமே பாதுகாப்போம்.

Leave a Comment