தமிழகத்திற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி இன்று மட்டும் எத்தனை பேருக்கு கொரோனா தெரியுமா.? இதோ மாவட்ட வாரியாக விவரம். !

தமிழகத்தில் இன்று மட்டும் 231 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது இதில் சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 174 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2757 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள செய்தியில் இன்று புதிதாக 231  பேருக்கு கொரோனா தோற்று கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது அதுமட்டுமில்லாமல் இதில் அதிகபட்சமாக சென்னையை சேர்ந்தவர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள் சென்னையில் மட்டும் 174 பேர் பாதிக்கப் பட்டுள்ளார்கள்.

அதேபோல் இன்று கொரோனா கண்டறிய பட்டவர்களில் 158 பேர் ஆண்களாகவும் 72 பேர் மட்டுமே பெண்களாக இருக்கிறார்கள் அதில் ஒருவர் திருநங்கை ஆவார். இதனால் தமிழகத்தில் முதல் முறையாக ஒரு திருநங்கை கொரோனாவாழ் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சென்னையை சேர்ந்த 76 வயது மூதாட்டி கொரோனா தொற்று  கண்டறியப்பட்ட நிலையில் அவர் இன்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் அதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இன்று 29 பேர் குணமடைந்து வீடு திரும்புகிறார்கள் குறிப்பிடத்தக்கது.

corona live update- tamil360newz
corona live update- tamil360newz

Leave a Comment