குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான நடிகை பவித்ரா லட்சுமி அவரது அம்மாவின் மரணம் குறித்து இன்ஸ்டாகிராமில் எமோஷனலாக பதிவு வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2வது சீசன் மூலம் போட்டியாளராக பங்கு பெற்ற பிரபலமானவர்களில் ஒருவர் தான் பவித்ரா லட்சுமி.
இந்நிகழ்ச்சிக்கு முன்பு இவர் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலம் கிடைக்கவில்லை. ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் புகழுடன் சேர்ந்து செய்த காமெடி கலாட்டாக்கள் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது. அப்படியே நிகழ்ச்சியில் பைனல் வரை சென்ற பவித்ரா குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் ஏராளமான திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகளை பெற்றார்.
அந்த வகையில் நாய் சேகர் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர் இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் கடந்த ஆண்டு வெளியாகி கலவை விமர்சனத்தை பெற்றது. மேலும் இதனை, தொடர்ந்து மலையாளத்தில் உல்லாசம் ஆதிருஷ்யம், யுகி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் படங்களை தவிர்த்து ஆல்பம் பாடல்களிலும் நடித்துள்ளார் இந்நிலையில் நடிகை பவித்ரா லக்ஷ்மியின் அம்மா கடந்த வாரம் மரணமடைந்து இருக்கிறார். எனவே தாயின் மரணம் குறித்து முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் நீண்ட பதிவு ஒன்றை பவித்ரா லட்சுமி பதிவிட்டுள்ளார். எனவே இதன் காரணமாக சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த பதிவில் பவித்ரா லட்சுமி கூறியதாவது, நீ என்னை விட்டு பிரிந்து சென்று ஏழு நாட்கள் ஆகிறது ஏன் இவ்வளவு சீக்கிரம் என்னை விட்டு பிரிந்து சென்றாய் என எனக்கு புரியவில்லை. கடந்த ஐந்து வருடங்களாக நீ அனுபவித்து வந்த வலியும், வேதனையும் இனி உனக்கு இல்லை என்பதே எனக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம்.

நீ எப்பொழுதும் ஒரு சூப்பர் மாமா உண்மையில் சூப்பர் வுமன். ஒற்றை பெற்றவராக இருப்பது எளிதான வேலை அல்ல ஆனால் நீங்கள் அதை எல்லாம் வழியிலும் சிறப்பாக செய்தீர்கள் உங்களுடன் சேர்ந்து பேச வேண்டும் சாப்பிட வேண்டும் என விரும்புகிறேன் ஆனால் அதற்கு வழியே இல்லை தயவு செய்து எப்பொழுதும் என் பக்கம் இருங்கள் இந்த கஷ்டமான நேரத்தில் என்னுடன் இருந்த அனைவருக்கும் நன்றி.
நீங்கள் இல்லை என்றால் நான் என்ன செய்திருப்பேன் என தெரியவில்லை என் அம்மாவின் கடைசி காலங்களில் அவருக்கு மிகவும் பிடித்தவனாக ஆதி இருந்தான். என்னை விட உன்னை தான் அவங்களுக்கு பிடிக்கும் நான் தவறவிட்ட நாட்களில் அவர்களை சிரிக்க செய்ததற்கு நன்றி, என் அம்மாவுக்கும் மகன் இல்லை ஆனால் நீயும் விக்னேஷும் அவரது மகன்களாக இருந்திருக்கிறீர்கள் அவர் எப்பொழுதும் உங்களை ஆசீர்வதிப்பார் என பதிவிட்டுள்ளார்.