என்னை வாழ்த்ததீர்கள் என்னுடைய தோழி என்னை எப்பொழுதும் மன்னிக்க மாட்டாள் – யாஷிகா ஆனந்த்.! வருத்தம்.

மாடலிங் துறையில் சிறப்பாக பயணித்த நடிகைகள் பலருக்கும் கவர்ச்சி நடிகையாகவும், ஹீரோயின் என்ற அந்தஸ்து கிடைக்கும் அந்த வகையில் நடிகை யாஷிகா ஆனந்த்துக்கு ஆரம்பத்தில் கவர்ச்சியான கதாபாத்திரங்கள் கிடைத்தாலும் போகப் போக சிறப்பான கதை அம்சங்களை தேர்ந்தெடுத்து தற்பொழுது முற்றிலுமாக மாற்றிக்கொண்டு நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் இருட்டு-அறையில்-முரட்டு-குத்து, ஜாம்பி போன்ற படங்களில் அதிக கவர்ச்சி காட்டி நடித்து இருந்தாலும் அதன் பிறகு சினிமா எப்படிப்பட்டது என்பதை சரியாகப் புரிந்துகொண்டார்.

தற்பொழுது கடமையை செய், இவன்தான் உத்தமன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் வித்தியாசமான ரோலில் நடித்துள்ளார் அவரது ரசிகர்கள் இப்படிப்பட்ட படங்களில் அவரது நடிப்பு திறமையை பார்க்க ஆவலுடன் காத்து இருந்தனர். ஆனால் யாஷிகா அதற்கு முன்பாக மிகப்பெரிய ஒரு சம்பவத்தை செய்து விட்டார்.

யாஷிகா ஆனந்த் சமீபத்தில் புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பினார் அப்போது இவரது கார் மகாபலிபுரம் அருகே உள்ள ஒரு தடுப்புச் சுவரில் அதிவேகத்தில் வந்து மோதியது அதில் யாஷிகா உட்பட அவரது இரண்டு ஆண் நண்பர்கள் மற்றும் வள்ளி செட்டி பவானி என்பவரும் இருந்தனர். ஆனால் சம்பவ இடத்திலேயே  பவானி உயிரை விட்டார்.

யாஷிகா மற்றும் அவரது இரு ஆண் நண்பர்கள் இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனர். ஒருசில ஆபரேஷன்கள் செய்து கொண்ட யாஷிகா ஆனந்த் தற்போது  தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு செய்தி ஒன்றை குறிப்பிட்டுள்ளார் அவர் கூறியது.

என்னுடைய பிறந்தநாளுக்கு யாரும் எனக்கு வாழ்த்து சொல்லாதீர்கள் பவானியின் மறைவால் நான் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்வுடனே இருப்பேன் பவானி என்னை மன்னிக்க மாட்டாள்.

அவருடைய குடும்பம் நிச்சயம் ஒரு நாள் என்னை மன்னிக்கும் என தெரிவித்துள்ளார் இவ்வாறு இவர் கூறிய செய்தி தற்போது இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.

Leave a Comment