பிரபல நடிகருக்கு வாழ்த்து கூறி நெகிழ்ச்சியில் ஆழ்த்திய நடிகர் ரஜினி.! பெருமையுடன் பதிவிட்ட நடிகர்.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக அனைவருக்கும்  முன்னோடியாகத் திகழ்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு தற்போது வயது ஆனாலும் கூட அதனைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அதுவும் மிகவும் தமிழ் திரைப்படங்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் மிக பெரிய சாதனை படைத்து வருகிறது.

சமீப காலங்களாக இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களில் முன்பு போல் சுறுசுறுப்பு இல்லை என்ற கருத்தை ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.  இருந்தாலும் ரஜினியின் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்று வருவதால் தொடர்ந்து இவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் ரஜினி காந்த் இளம் நடிகர் ஒருவரின் நடிப்பை பாராட்டி அவருக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். இந்த தகவல் தான் தற்பொழுது வைரலாகி வருகிறது அதாவது தமிழ் சினிமாவில் தனது சிறந்த நடிப்பினால் நடிகர் என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டவர் தான் விக்ரம் பிரபு.

இவர் நடித்த ஏராளமான திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தாலும் இன்னும் சில திரைப்படங்கள் தோல்வியையும் பெற்றுத்தந்தது.  இந்நிலையில் இவர் நடிப்பில் வெளிவந்த கும்கி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்ததோடு மட்டுமல்லாமல் சிறந்த அறிமுக நடிகர் என்ற விருதையும் பெற்றார்.

இந்நிலையில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தற்போது டாணாக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இதனைப் பார்த்த ஏராளமான முன்னணி நடிகர் பாராட்டிய நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் டாணாக்காரன் திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருப்பதாக நடிகர் விஜய் விக்ரம் பிரபுவிற்கு செல் போனில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை விக்ரம் பிரபு நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை சாதித்து விட்டேன் என மிகவும் பெருமையாக பதிவிட்டுள்ளார்.

Leave a Comment