தேவையில்லாத இடத்தில் கை வைத்த இசையமைப்பாளர் – புலம்பித் தள்ளிய பிரபல நடிகை கல்யாணி.?

தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் பல்வேறு சீரியல்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை கல்யாணி. குழந்தை நட்சத்திரமாக பல டாப் நடிகர்கள் படங்களில் நடித்தது உண்டு அந்த வகையில் நடிகை கல்யாணி ஜெயம் படத்தில் ஹீரோயின் சதாவுக்கு தங்கையாக நடித்து அசத்தியிருப்பார்.

இந்த படத்தில் கல்யாணிக்கு சிறப்பான கதாபாத்திரமாக அமைந்தது அதனைத் தொடர்ந்து அவ்வப்போது படங்களில் தலைகாட்டி வந்தாலும் பெரிய அளவு கதாபாத்திரங்கள் மற்றும் ஹீரோயின் ரோல் கிடைக்காததால் ஒரு கட்டத்தில் சின்னத்திரை பக்கம் அடி எடுத்து வைத்தார் இப்படி ஓடி கொண்டிருந்த இவர் திடீரென ஒருவரை திருமணம் செய்துகொண்டு தற்போது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை கல்யாணி அவ்வப்போது சினிமா துறையில் தனக்கு நடந்த விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அதன்படி நான் சினிமாவுலகில் நடித்துக் கொண்டிருக்கும் போது எங்கள் வீட்டில் நெருங்கிய ஒருவராக பழகி வந்தவர் இசை அமைப்பாளர் அவர் என்னை எட்டு வயது இருக்கும் பொது தூக்கி வைத்து தேவையில்லாத இடத்தை தொடுவார்.

அப்பொழுது எனக்கு அருவருப்பாக இருக்கும். ஆனால் நான் அப்போது அதை எனது அம்மாவிடமே சொல்லவில்லை. ஆனால் அவர் தேவையில்லாத இடத்தை தொடும் பொழுது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது இதுவரை எனது அப்பா, அம்மாவிடம் நான் சொல்லவில்லை என்றாலும் எனது கணவரிடம் இதை சொன்னேன் எனது சூழ்நிலையை புரிந்துகொண்டு என்னை சமாதானப்படுத்தினார்.

சினிமா உலகில் சில தேவையில்லாத பாலியல் தொல்லைகளை கொடுக்கும் நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என கூறினார் கல்யாணி. கடைசிவரை அந்த இசையமைப்பாளர் யார் என்பது சொல்லவில்லை ஆனால் அப்போது அவர் அறிமுக இசையமைப்பாளராக இருந்தாலும் இப்பொழுது ஒரு பிரபலமான இசையமைப்பாளர் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது ரசிகர்கள் அது யாராக இருக்கும் என்று தெரிந்துகொள்ள யோசித்து வருகின்றனர்.

Leave a Comment

Exit mobile version