பிக்பாஸ் வீட்டை விட்டு வெளிவருவதற்கு முன்பாகவே மூன்று படங்களில் கமிட்டான போட்டியாளர்.? அந்த செல்லக் குட்டி யார் தெரியுமா.?

சின்னத்திரையில் நடித்து வந்த பல்வேறு பிரபலங்கள் தற்போது வெள்ளித்திரையில் சிறப்பாக பயணிக்கின்றன. அந்த வகையில் சீரியல் நடிகர், நடிகைகள் என பலரும் சின்னத்திரையில் அறிமுகமாகி பிரபலம் அடைந்து பின்பு வெள்ளித்திரையில் கால் தடம் பதித்துள்ளனர். அந்த வகையில் பல்வேறு திறமைசாலிகளை வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தியுள்ள நிகழ்ச்சி என்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியில் முகம் தெரிந்த அல்லது ஓரளவிற்கு தெரிந்த பல பிரபலங்களை இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்கள் அனைவரிடமும் அவர்களை பிரபலப்படுத்தி சிறப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடத்தி வருகின்றனர். தற்போது பிக்பாஸ் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த சீசன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. நிகழ்ச்சியில் தற்போது 6 போட்டியாளர்களே உள்ள நிலையில் ஒரு போட்டியாளர் இன்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்.

ஆம் தாமரைச்செல்வி இன்று வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகின. மேலும் இந்த நிகழ்ச்சியில் முதல் பைனலிஸ்ட்  அமீர் இரண்டாவது நீருப் இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டில் நடந்த போட்டிகள் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள். இதற்கு அடுத்த 3 பைனலிஸ்ட்  இன்று மக்களின் வாக்குகளின் படி கமல் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது மூன்றாவது பைனலிஸ்ட் ராஜீ, நான்காவது பிரியங்கா மற்றும் ஐந்தாவது பாவணி மேலும் இவர்கள் ஐவரில் அடுத்த வார பைனல்ஸில்  யார் வெற்றி பெற உள்ளார் என்பதை பார்ப்போம். மேலும் மக்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் ராஜீ தான் டைட்டில் வின் பண்ணுவார் என எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும்  ராஜீவிற்கு தமிழ் சினிமாவில் அடுத்து உருவாக உள்ள மூன்று படங்கள் ராஜீவிற்க்காக  வெயிட்டிங்கில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . மேலும் ராஜி பிக்பாஸ்  நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவுடன் இந்த படங்களின் அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றன .

Leave a Comment