முழுநேர பயிற்சியாளராக இந்திய அணியில் செயல்படுவது குறித்து தனது கருத்தை சொன்ன – டிராவிட்.!

இளம் இந்திய அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டது இதில் 3 ஒருநாள் மற்றும்  மூன்று 20 ஓவர் போட்டிகளில் கலந்து கொண்டது. ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி.

அடுத்ததாக 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 2-1 என்ற கணக்கில் தோல்வியை தழுவி இலங்கையிடம் கோப்பையை பறிகொடுத்தது. தோல்வியை தழுவி இருந்தாலும் இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொடுத்தனர் என்றும் இந்திய அணியின் கேப்டன் தவான் கூறி முடித்தார்.

இந்த நிலையில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக தலைமை தாங்கிய டிராவிட் இந்திய அணியின் முழுநேர பயிற்சியாளராக செயல்படுவாரா என்ற கேள்வி சமூக வலைதளப் பக்கத்தில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு பதில் கூறிய டிராவிட்: பயிற்சியாளராக மிகவும் மகிழ்ச்சியுடன் செயல்படுகிறேன்.

இருப்பினும் நான் அடுத்து நடக்கப் போவதை நினைத்து யோசிப்பதில்லை தற்போதைக்கு நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் இந்த இலங்கை தொடரில் நான் இந்திய அணிக்கு பயிற்சி அளித்த அனுபவம் மகிழ்ச்சியான ஒன்று.

இளம் வீரர்களுடன் அணியின் பயிற்சியாளராக செயல்படுவது சிறப்பான ஒன்று இந்த தொடரில் நான் பயிற்சியாளராக செயல்பட்டாலும் முழுநேர பயிற்சியாளராக செயல்படும் பொழுது ஏகப்பட்ட சவால்கள் இருக்கும் அதனால் நான் முழுநேர பயிற்சியாளராக செயல்படுவெனா என்று கேட்டால் எனக்கு தெரியாது என டிராவிட் கூறினார். முழு நேர பயிற்சியாளர் ஆக மாற இன்னும் சில காலங்கள் ஆகும் என ஒரு சிலர் கூறி வருகின்றனர்.

Leave a Comment