இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக பிரபல நாட்டிற்கு செல்லும் தளபதி விஜய்.?அங்கு இத்தனை விஷயங்களா நடக்க போவது.?

vijay
vijay

இளைய தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 1000 திரையரங்குகளில் குறையாமல் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் அதிகப்படியான வசூல் செய்துவிட்டது மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் தளபதி விஜய் தற்போது படு பிசியாக நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் முடிந்த நிலையில் அடுத்தடுத்த படபிடிப்பு சென்னை,டெல்லி போன்ற முக்கிய இடங்களில் நடந்து வந்தது.இவ்வாறு படுபிஸியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வரும் தளபதி விஜய் தனது இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக மீண்டும் ஜார்ஜியா நாட்டிற்கு செல்ல போகிறார்.

என ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக கசிந்துள்ளது ஆம் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா நாட்டிற்கு சென்று தளபதி விஜய் அங்கு சண்டை காட்சி மற்றும் முக்கியமான காட்சிகளுக்காக கூடிய சீக்கிரம் செல்லப் போகிறாராம்.படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து முடிந்தவுடன் கூடிய சீக்கிரம் இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தளபதி விஜய் தனது அடுத்த திரைப்படத்தை எந்த இயக்குனருடன் கைகோர்க்க போகிறார் என்பது பற்றி ரசிகர்கள் தெரிந்து கொள்வதற்காக தற்போதே சமூக வலைதள பக்கங்களில் பலவிதமான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

vijay
vijay

ஆனால் பல ரசிகர்களும் இவரது அடுத்த திரைப்படத்தை இயக்குனர் வம்சி தான் இயக்கப் போகிறார் என்று கமெண்ட் பதிவு செய்வது இது உண்மையா இல்லையா என ரசிகர்கள் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டது.