சினிமாவில் ரீ – என்ட்ரி கொடுக்கும் காமெடி புயல் “வடிவேலு”.? எந்த மாதிரியான படம் தெரியுமா.? உண்மை தகவல் இதோ.

சினிமா உலகில் ஒரு நபர் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள மற்றவர்களை காப்பி அடிப்பதை விட தனது திறமையை வெளிக்காட்டினால் அதுக்கு வேற மாதிரி இருக்கும் ஏனென்றால் சினிமாவை பொறுத்தவரை வித்தியாசமான ஒன்றே மக்களை வெகுவாக கவரும் என்பது எழுதப்படாத ஒன்று.

அந்த வகையில் வடிவேல் சினிமா உலகில் என்ட்ரி கொடுப்பதற்கு முன்பாக கவுண்டமணி செந்தில் நாகேஷ் அவர்கள் தனது காமெடியில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி வந்தனர் அப்போதைய காலகட்டத்தில் அடி எடுத்து வைத்தார்.

இவர் எல்லாம் சினிமாவில் நிலைத்து நிற்கப் போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனக்கென ஒரு புதிய யுத்தியைக் கையாண்டு சினிமா உலகில் பல்வேறு விதமான படங்களில் நடித்து தன்னை நிரூபித்தார்.

அத்தகைய திரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு வடிவிலு காமெடியும் பெரிதாக உதவியன அதனாலதான் தொடமுடியாத உச்சத்தை நோக்கி பயணித்தார் மேலும் தமிழ் சினிமாவில் அப்போதைய காலகட்டத்தில் உச்சத்திலிருந்த  ரஜினி, விஜயகாந்த், கார்த்தி, பிரபுவை தற்போது அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோருடன் இணைந்து நடித்து தனக்கென ஒரு பெயரையும் புகழையும் சம்பாதித்தார்.

அதுமட்டுமில்லாமல் ஹீரோவாகவும் அடியெடுத்து வெற்றிகண்ட வடிவேலுக்கு தங்க மழை நனைந்தார் அப்போதைய காலங்களில் நடிகர்களையும் மிஞ்சுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உச்சியில் இருந்த வடிவேலு என்ன செய்கிறார் என்று தெரியாமல் சில சர்ச்சையான அரசியல் பேசி தனது சினிமா வுக்கு அவரே ஆப்பு வைத்துக் கொண்டார்.

அதன் பிறகு சினிமாவில் காலடி எடுத்து வைக்க நினைத்தாலும் அவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை தற்போது 10 ஆண்டுகள் ஆகியும் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்த வடிவேலுக்கு மக்கள் கூட்டம் மட்டும் அப்படியே இருக்கிறது. அதற்கு காரணம் அவரது காமெடியை மீம்ஸாக மாற்றி வடிவேலுவை மேலும் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

இப்படி இருந்து கொண்டு இருந்தாலும் சினிமாவில் நடிக்காதது வடிவேலுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவே இருந்து வந்தது. அவர் வெளியே வந்தால் அவரிடம் கேட்கும் முதல் கேள்வி சினிமாவில் எப்போது காலடி எடுத்து வைக்கிறார்கள் என்பதுதான் நிச்சயம் வருவேன் என்று கூறி அங்கிருந்து விடை பெறுவார் இப்படி இருந்த அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாக உள்ள “கௌபாய்” என்ற படத்தில் இவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. படத்தை ஒய் நாட் ஸ்டுடியோ  சசிகாந்த் என்பவர் இந்த திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறார் இந்தப் படம் நேரடியாக நெட்ஃபிக்ஸ் தலத்தில் வெளி வர உள்ளது என்பது கூடுதல் தகவல்.

Leave a Comment