வெற்றிமாறன் திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் சூரி..! டைட்டிலே சும்மா தெறிக்க விடுதே..!

comedy actor soori acting to vetrimaran movie:தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக வலம்வந்த பல நடிகர்கள் தற்போது சினிமாவில் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் வடிவேலு, சந்தானம்,  யோகி பாபு என பலரும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இதை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் மிகப் பிரம்மாண்டமான காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி இவரும் சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளாராம்.

இவ்வாறு இந்த திரைப்படத்தைப் பற்றி பல்வேறு செய்திகள் இணையத்தில் வந்த நிலையில் இந்த திரைப்படம் ட்ராப் செய்யப்பட்டதாக இறுதியில் கூறப்பட்டது. இதை தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறன் சூரிக்கு கதை எழுதி உள்ளாராம்.

அதாவது இந்த கதையானது பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதைதான் இந்த கதையை வெற்றிமாறன் ஒரு திரைக்கதையாக எழுதியுள்ளாராம் இந்த திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு ஒரு வாகன ஓட்டியாக கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

மேலும் இவ்வாறு உருவாகும் இந்த பிரம்மாண்டமான திரைப்படத்திற்கு துணைவன் என்று பெயர் சூட்டலாம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.  மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் கூடிய விரைவில் தொடரும் என செய்திகள் வெளியாகி உள்ளது.

Leave a Comment