ஹீரோக்களை விட அதிக சம்பளம் வாங்கும் காமெடியன்..! தலைவன் வேற ரகம்..

தமிழ் சினிமா உலகில் ஹீரோக்கள் அதிகமாகிவிட்டனர் இப்பொழுது ஹீரோக்கள் தான் ஒவ்வொரு படம் ஹிட் அடிக்கும் பொழுது தனது சம்பளத்தை அதிகமாக உயர்த்திக் கொள்கின்றனர் இதனால் தயாரிப்பாளர்கள் பலரும் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். தொடர்ந்து ஹீரோயின்களும் அதே வேலையை தான் தற்போது செய்து வருகின்றனர்.

இதனால் சினிமா எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்று தெரியாமல் புதுமுக  தயாரிப்பாளர்கள் பலரும் முழி பிதுங்கிப் போய் இருக்கின்றன. ஹீரோ ஹீரோயின்களை தொடர்ந்து அதிகம் சம்பளம் வாங்குபவர்கள் காமெடியன்கள்தான் ஹீரோ 50 நாள் நடிக்கிறார் என்றால் காமெடியன் படத்தில் 15 நாள் நடித்தால் போதும் ஆனால் அவர்களுக்கு நாள்தோறும் சம்பளம்.

அந்த வகையில் காமெடியில் ஜொலிக்கும் சந்தானம், வடிவேலு, சூரி போன்றவர்கள் தற்போது கதாநாயகனாகிவிட்டதால் யோகி பாபுவுக்கு லக்கடித்துள்ளது யோகி பாபு தான் தற்பொழுது அதிக படங்களில் கமிட் ஆகியுள்ளார் மேலும் ஹீரோக்களுக்கு நிகராக யோகி பாபு சம்பளம் வாங்கி வருகிறார்.

இதுபோல் 90 கால கட்டங்களில் இருந்த காமெடி நடிகர்களும் ஹீரோக்களுக்கு  நிகராகவே சம்பளம் வாங்கினர். ஆம் அப்பொழுது கொடி கட்டி பறந்த சரத்குமார் பிரபு போன்றவர்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர் காமெடி நடிகர் கவுண்டமணி இவர்  அப்பொழுது ஒரு படத்திற்கு 35 லட்சம் வாங்குவாராம். ஹீரோக்கள் வெறும் 30 லட்சம் தான் வாங்குவார்களாம் அப்பொழுது கவுண்டமணிக்கு அவ்வளவு டிமாண்ட்.

மேலும் தயாரிப்பாளர்கள் முதலில் கவுண்டமணியிடம் தான் கால்ஷீட் கேட்பார்களாம் பிறகு தான் ஹீரோக்களிடமே போவார்களாம் அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து இருக்கிறார்  கவுண்டமணி. கவுண்டமணியை தொடர்ந்து செந்திலும் அதிக படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் அதிக சம்பளமும் வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இருப்பினும் 90 கால கட்டங்களில் இருந்த நடிகர்களுக்கு நிகராக வலம் வந்தவர் கவுண்டமணி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment